Narai Mudi Karupaga Enna Seiya Vendum
இந்த நரை முடி என்பது முன்பு பெரியவர்களுக்கு மட்டும் வந்தது ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது அனைவருக்கும் இந்த நரை முடி வருகிறது. இதற்கு ஒரு பக்கத்தில் நாம் உணவு பொருட்கள் மட்டுமே காரணம் என்றும் சொல்ல முடியாது. நம்முடைய அலட்சியம் என்றும் சொல்லாம்.
என்ன தான் செயற்கை டை வாங்கி பயன்படுத்தினாலும் அது நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது அனைவர்க்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. நரைமுடியை கருமையாக இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுங்கள் அது தான் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சரி இந்த பதிவில் நாம் நரை முடியை கருமையாக ஒரு இயற்கை முறையை பற்றி பார்க்கலாம் வாங்க.
White hair problem solution in tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி பொடி – 4 டீஸ்பூன்
- கருப்பு எல் – 3 டீஸ்பூன்
- கரிசலாங்கண்ணிபவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 250 கிராம்
ஸ்டேப்: 1
இருப்பு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதனை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும்.
ஸ்டேப்: 2
எண்ணெய் ஓரளவு கொத்தி வைத்தவுடன் அதில் செம்பருத்தி பொடி – 4 டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன், நெல்லிக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் இந்த மூன்றையும் சேர்த்து 5 நிமிடம் கலந்துவிடவும்.
ஸ்டேப்: 3
அந்த பொருட்கள் அனைத்தும் ஓரளவு எண்ணெயில் கலந்த பின் நாம் எடுத்து வைத்துள்ள கருப்பு எல்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அதன் பின் அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் மீது தட்டுகளை கொண்டு மூட வேண்டாம்.
ஸ்டேப்: 4
மூடாமல் அப்படியே விட்டு அது ஆறியதும் தட்டை கொண்டு மூடி வைக்கலாம். பின்பு இரண்டு நாட்களுக்கு அப்படியே இருக்கட்டும் அப்போது தான் அதில் இருக்கும் மினரல் அந்த எண்ணெயுடன் கலந்துவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ 15 நாட்களில் முடி உதிர்வை நிறுத்தி, வளர்ச்சியை அதிகப்படுத்த வெந்தயம், கருவேப்பிலை மட்டும் போதும்
ஸ்டேப்: 5
இந்த எண்ணெயை வாரத்திற்கு 3 நாட்கள் இந்த தொடர்ந்து தடவுவதால் இயற்கையாகவே நரை முடி கருப்பாக மாறிவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |