நரை முடி கருப்பாக
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நரை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். முன்னோர்கள் காலத்தில் எல்லாம் வயதானால் வெள்ளை முடி ஏற்படும். ஆனால் இப்பொழுது இளம் வயதினருக்கே வெள்ளை முடி தோன்றுகிறது. வெள்ளை முடி வந்தாலே வயதான தோற்றம் போல் காட்சியளிக்கும். இதனால் இவர்கள் கூட இருப்பவர்களே கிண்டலும், கேலியும் செய்வார்கள். அதற்காக கடையில் விற்கும் பொருட்களை பயன்படுத்தினால் உங்களின் ஆரோக்கியம் பாதிக்கும். ஆரோக்கியம் பாதிக்காத வகையில் இயற்கையான முறையில் உங்களின் வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றலாம். வாங்க எப்படி என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ வெள்ளையாக இருக்கும் முடியில் இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க.. மாற்றத்தை நீங்களே பார்ப்பீர்கள்
நரை முடி கருப்பாக மாற எண்ணெய்:
ஸ்டேப்:1
முதலில் எண்ணெய் செய்வதற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொள்வோம். கருஞ்சீரகம் தேவையான அளவு, மருதாணி இலை 1 கைப்பிடி, கரிசலாங்கண்ணி இலை, தேங்காய் எண்ணெய் 200 ml போன்றவை தேவையான பொருட்கள்.(கரிசலாங்கண்ணி இலை கிடைக்கவில்லை என்றால் கடையில் கரிசலாங்கண்ணி பொடி கிடைக்கும் அதை வாங்கிக்கொள்ளுங்கள்)
ஸ்டேப்:2
முதலில் கருஞ்சீரகம் அரைத்து கொள்ளுங்கள். பின் மருதாணி இலையையும் அரைத்து கொள்ளுங்கள். பின் கரிசலாங்கண்ணி இலையையும் அரைத்து கொள்ளுங்கள். மூன்று பொருட்களையும் தனி தனியாக அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்:3
பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து கொள்ளுங்கள். அதில் 200 ml தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் குறைவான தீயிலே வையுங்கள்.
ஸ்டேப்:4
அதில் அரைத்து வைத்திருக்கும் கருஞ்சீரகம் பொடியை சேருங்கள். பின் கருஞ்சீரகம் கொதித்த பிறகு அரைத்த மருதாணியை சேருங்கள். மருதாணி இலையை சேர்த்த பிறகு எண்ணெய் பொரிந்து காணப்படும்.
ஸ்டேப்:5
இந்த எண்ணெய் பொரிந்து முடித்த பிறகு அரைத்து வைத்த கரிசலாங்கண்ணி பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும். இதனை சேர்த்த பிறகு எண்ணெய் கருப்பாக மாறிவிடும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
ஸ்டேப்:6
எண்ணெய் சூடு ஆறியதும் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். வடிகட்டிய பிறகு பாத்திரத்தின் கீழ் எண்ணெய் மட்டும் தங்கியிருக்கும். இதில் சேர்த்திருக்கும் பொருட்கள் அனைத்தும் முடியை கருப்பாக மாற்ற கூடிய சக்தி உள்ளது.
ஸ்டேப்:7
இந்த எண்ணையை தினமும் காலையில் தடவுங்கள். இல்லை என்னால் காலையில் தடவ முடியாது என்றால் இரவு தூங்குவதற்கு முன் தடவி கொண்டு தூங்குங்கள். காலையில் எழுந்ததும் நீங்கள் எப்பொழுதும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளித்து விடலாம். இது போல் தொடர்ந்து 7 நாட்கள் தேய்த்து வந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும். புதிதாக வளர்கின்ற வெள்ளை முடியையும் வளர விடாமல் தடுத்து விடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |