வேம்பாளம் பட்டை முடி எண்ணெய் | Vembalam Pattai Hair Oil Tamil
Vembalam Pattai Uses in Tamil – இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இருக்கு.. இதற்கு முக்கிய காரணம் நாம் தான். சரியாக முடியை பராமரித்திருந்தால் நமக்கு கண்டிப்பாக முடி உதிர்வு பிரச்சனை வந்திருக்காது. முடி உதிர்வு பிரச்சனை வந்த பிறகு தான் முடியை சரியாக பராமரிக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைக்கும் அனைவருக்கும் இன்றைய பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். முடி உதிர்வு மிகவும் தீர்வளிக்கும். அதாவது வேம்பாளம் பட்டை தலைமுடி சார்ந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிக்கிறது. ஆக இந்த வேம்பாளம் பட்டையை பயன்படுத்தி கூந்தல் எண்ணெய் தயாரிக்கும் முறையை பற்றி தெரிந்துகொள்வோம். இந்த எண்ணெயை நாம் காய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை, ஒரு நாள் முழுவதும் ஊறவைத்தால் போதும். சரி வாங்க அதனை எப்படி எல்லாம், என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று படித்தறியலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- வேம்பாளம் பட்டை – 25 கிராம்
- வெட்டி வேர் – 20 கிராம்
- காய்ந்த செம்பருத்தி பூ – 20
- காய்ந்த நெல்லிக்காய் – 10
- தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் முடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க..! நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துவிடும்..!
வேம்பாளம் பட்டை முடி எண்ணெய் செய்முறை – Vembalam Pattai Hair Oil Benefits:
ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள், பிறகு அதில் வேம்பாளம் பட்டை 25 கிராம், வெட்டி வேர் 20 கிராம், காய்ந்த செம்பருத்தி பூ 20, காய்ந்த நெல்லிக்காய் 10 ஆகியவற்றை சேர்க்கவும்.
பிறகு இந்த பொருட்கள் அனைத்தும் எண்ணெயில் முங்கும் அளவிற்கு இன்னும் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை ஊற்றவும்.
பின் ஒரு நாள் முழுவது எண்ணெயில் அந்த பொருட்களை ஊறவைக்கவும். மறுநாள் அவற்றை திறந்து பார்த்தால் எண்ணெய் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதேபோல் எண்ணெய் நல்ல வாசனையாகவும் இருக்கும்.
ஆக இவற்றை ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள், பிறகு இந்த எண்ணெயை இரண்டு நாட்கள் காலை மற்றும் மாலை வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்க வேண்டும்.
இரண்டு நாள் வெயிலில் வைத்து எடுத்த பிறகு தலைக்கு கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தலாம். ஒரு மாதம் வரை இந்த எண்ணெயை தொடர்ந்து தலையில் அப்ளை செய்து வர முடி உதிர்வு பிரச்சனை நின்று, முடி அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும்.
அதேபோல் உங்களுக்கு இளநரை பிரச்சனை இருக்கிறது என்றால் தாராளமாக இந்த எண்ணெயை தயார் செய்து தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம், இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் இளநரை நீங்கி, முடியை நன்கு கருமையாக வளர செய்யும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் பாத வெடிப்பை சரி செய்யலாம்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |