இதை தடவியவுடன் நரைமுடி கருமையாக மாறிவிடும் மற்றும் முடி அடர்த்தியாக வளரும்..! | White Hair Solution at Home in Tamil
இன்றைய மாறுபட்ட லைப் ஸ்டைல் காரணமாக டீன் ஏஜ் வயதினருக்கு நரை முறை பிரச்சனை வந்துவிடுகிறது. இதற்கு மாறுபட்ட லைப் ஸ்டைல் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும் என்று 100% சொல்லிவிட முடியாது. இதற்கு உடல்ரீதியாக, உணவு ரீதியாக, மரபணு ரீதியாக என்று நிறைய காரணங்கள் உள்ளது. ஆனால் இது போன்ற பிரச்சனைகளை மிக எளிதான நமக்கு இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். நரை முடி கருமையாக செயற்கை பொருட்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. இன்று நாம் சில இயற்கை மூலிகை பொருட்களை கொண்டு கூந்தல் என்னை தயாரிக்கும் முறையை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- மருதாணி பவுடர் – இரண்டு ஸ்பூன்
- கருவேப்பிலை பவுடர் – இரண்டு ஸ்பூன்
- நெல்லிக்காய் பவுடர் – இரண்டு ஸ்பூன்
- செம்பருத்தி பவுடர் – இரண்டு ஸ்பூன்
- கரிசலாங்கண்ணி பவுடர் – இரண்டு ஸ்பூன்
- வேப்பிலை பவுடர் – இரண்டு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே நாளில் நரைமுடி கருமையாக இந்த இரண்டு பொருள் போதும்..!
நரைமுடி கருமையாக எண்ணெய் செய்முறை – White Hair Solution at Home in Tamil:
ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைக்கவும் பிறகு அதில் மருதாணி மாவுடன் இரண்டு ஸ்பூன், கருவேப்பிலை பவுடர் இரண்டு ஸ்பூன், நெல்லிக்காய் பவுடர் இரண்டு ஸ்பூன், செம்பருத்தி பவுடர் இரண்டு ஸ்பூன், கரிசலாங்கண்ணி பவுடர் இரண்டு ஸ்பூன், வேப்பிலை பவுடர் இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் வரை நன்கு வறுக்க வேண்டும். அதாவது பவுடர் அனைத்தும் கருமையாகும் வரை வறுக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து அதனுடன் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். பிறகு கைவிடாமல் தேங்காய் எண்ணெயை 5 நிமிடம் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஸ்டேப்: 3
பிறகு எண்ணெய் நன்கு கொதிக்க வந்து அடுப்பை அணைத்து நன்றாக ஆறவைக்க வேண்டும். இவ்வாறு ஆற வைக்கும் போது மூடி போடவேண்டாம். எண்ணெய் நன்கு ஆறியதும். தடை போட்டு மூடி இரண்டு நாட்கள் வரை அந்த வாணலியிலேயே எண்ணெயை நன்கு ஊறவைக்கவும்.
ஸ்டேப்: 4
இரண்டு நாட்கள் கழித்து எண்ணெயை நன்கு வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தி வர நரைமுடி கருமையாக மாற ஆரம்பிக்கும். மேலும் இந்த எண்ணெயை முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்களும் கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தி முடி உதிவு பிரச்சனை நீங்கி முடி நீளமாக மற்றும் அடர்த்தியாக வளர ஆர்மபிக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற நெல்லிக்காய், கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |