கடன் அடைய பரிகாரம் | Kadan Adaya Pariharam in Tamil
பணம் கஷ்டம் என்பது அனைவருமே இருக்கும். மேலும் அந்த கஷ்டத்தை தீர்க்க வெளியில் கடன் வாங்குவது அனைவரின் வீட்டிலும் உள்ளது தான். அந்த கடனை அடைக்க நினைத்தால், அதற்கு நிறைய பரிகாரம் செய்து பார்த்திருப்பீர்கள். அல்லது கோவில்களுக்கு செல்வீர்கள். ஆனால் கடனை அடைக்க முடியவில்லை அதற்கு என்ன தான் செய்வது என்று புலம்புவீர்கள். இந்த ஜனவரி மாதம் வரும் மைத்ர முகூர்த்தம் நேரத்தில் இதை மட்டும் செய்யுங்கள் எப்பேர்பட்ட கடனும் தீர்ந்துவிடும். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..!
Kadan Adaya Pariharam in Tamil:
பொதுவாக தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள் அதற்கும் இதற்கு என்ன சம்பந்தம் என்று நினைப்பீர்கள். தை மாதம் ஜனவரியில் தான் பிறக்கும். ஆகவே தான் ஜனவரி மாதத்தில் வரும் இந்த நேரத்தில் இதை மட்டும் செய்யுங்கள்.
கடன் அடைக்க உகந்த நேரம்:
கடன் அடைக்க உகந்த நேரம் என்றால் மைத்ர முகூர்த்தம் நேரம் தான். அந்த நேரத்தில் என்ன செய்வது என்பதை பார்ப்போம்..!
28.01.2023, சனிக்கிழமை, காலை 11.39 AM முதல் 01.27 PM வரை கடன் அடைக்க நேரம் உள்ளது. அப்போது இதை மட்டும் செய்யுங்கள்.
ஒரு மொய் கவர் வாங்கிக் கொள்ளவும். பின்பு ஒரு பிரியாணி இலையில் கடன் தீர வேண்டும் என்பதை பேனாவில் எழுதி தனியாக வைத்துக் கொள்ளவும். அதன் பின் பச்சை கற்பூரம் 1, ஏலக்காய் 1 சேர்த்து இந்த மூன்று பொருளையும் சேர்த்து அந்த மொய் கவரில் நாம் வாங்கிய கடனில் 10 ரூபாயை மட்டும் அல்லது உங்களால் முடிந்த ரூபாயை சேர்த்து இந்த நேரத்தில் வைக்கவும்.
இப்படி வரும் மைத்ர முகூர்த்தம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதத்தில் வரும் நேரத்தில் நீங்கள் இது போல் எழுதி அதில் வைத்துக் கொண்டு வரவேண்டும்.
மைத்ர முகூர்த்தம் நேரம் பற்றி தெரிந்துகொள்ள 👉👉 (Jan 2023) கடனை அடைக்க மைத்ர முகூர்த்தம் 2023 | Maitreya Muhurtham 2023
மொய் கவர் கிழிந்து விட்டால் உடனே அதனை எறிந்துவிட்டு வேறு கவரை வாங்கி அதிலும் இது போல் செய்து வைக்கலாம்.
இதுபோல் செய்வதால் உங்கள் கடன் சீக்கிரம் தீர்ந்துவிடும். ஆகவே மைத்ர முகூர்த்ததில் இதை செய்து பாருங்கள்.
இதையும் செய்து பாருங்கள் 👉👉 கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |