Kadan Prachanai Neenga
இன்றைய ஆன்மிகம் பதிவில் கடன் தொல்லை காணாமல் போக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது. பணக்கஷ்டம் இல்லாதவர் என்று நாம் யாரையும் சொல்ல முடியாது. கடன் பிரச்சனையை சரி செய்ய வேண்டும், பணக்கஷ்டம் நீங்க வேண்டும் என்று பலரும் பல பரிகாரங்களை செய்து வருகிறார்கள். பரிகாரங்கள் செய்தும் பலன் கிடைக்கவில்லை என்று புலம்புபவர்கள் இந்த பதிவை படித்து பயன் பெறுங்கள்.
இந்த 3 இடத்தில் வசம்பை வைத்தால் உங்கள் வீட்டில் பணம் கட்டுக்கட்டாக சேரும்..! |
கடன் தொல்லை நீங்க பரிகாரம்:
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் படிப்பு செலவு, மருத்துவ செலவு, கல்யாண செலவு என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகிறார்கள். நாளடைவில் அந்த கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
அதேபோல சிலர் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அது வீட்டில் தங்குவதில்லை என்றும் புலம்புகிறார்கள். அப்படி புலம்புபவர்கள் இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்து பாருங்கள். பின் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனையும் நீங்கி விடும்.
ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் வசம்பு பரிகாரம் |
மிளகு பரிகாரம்:
கடன் பிரச்சனையை காணாமல் போக செய்வதற்கு உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் மிளகு மட்டும் போதும்.
முதலில் 5 மிளகை எடுத்து கொள்ள வேண்டும். பின் அந்த மிளகை உங்கள் உள்ளங்கைகளில் வைத்து கொள்ளுங்கள். பின் உங்கள் வீடு வாசலில் கிழக்கு பார்த்து நிற்க வேண்டும். பின் உங்கள் கைகளில் வைத்திருக்கும் மிளகை உங்கள் தலையை சுற்றி வலது புறமாக 3 முறை மற்றும் இடது புறமாக 3 முறை சுற்ற வேண்டும்.
பின் இந்த மிளகில் 4 மிளகை எடுத்து ஒவ்வொரு மிளகையும் ஒவ்வொரு திசையில் வீச வேண்டும். அதாவது கிழக்கு திசையில் ஒரு மிளகு, மேற்கு திசையில் ஒரு மிளகு என்று 4 திசையிலும் மிளகை வீச வேண்டும். பின் 5 ஆவதாக இருக்கும் மிளகை உங்கள் தலைக்கு நேராக வானத்தை நோக்கி வீச வேண்டும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் செய்து வரலாம். இதை நீங்கள் மாலை பொழுதில் செய்து வர வேண்டும். இந்த மிளகு பரிகாரத்தை உங்கள் வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் செய்யலாம்.
இதுபோல செய்வதால் உங்கள் வீட்டில் இருக்கும் கண்திருஷ்டி நீங்கி பணவரவு அதிகரிக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் கடன் தொல்லை அனைத்தும் காணாமல் போய்விடும். மேலும், உங்கள் வீட்டில் செல்வவளம் அதிகரிக்க தொடங்கும்.
உங்கள் வீட்டில் செல்வம் பெறுக வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் போதும்..! |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |