நினைத்தது நடக்க என்ன செய்ய வேண்டும் – Ninaithathu Nadaka Pariharam
நண்பர்களே நம்முடைய வாழ்வில் ஏதாவது ஒரு கஷ்டங்கள் அல்லது ஆசைகள் இருந்துகொண்டு தான் உள்ளது. அப்படி ஆசைகள் இருந்தாலும் அதனை அடைய அதிகமாக கஷ்டப்பட்டு தான் அடையவேண்டும் அல்லவா..? அப்படி நாம் கஷ்டங்கள் அனுபவித்தாலும் அதற்கு சரியான பலன்கள் அல்லது நாம் ஆசைபட்டது கிடைக்காது. ஆனால் நம்முடைய ஆசைகள் நாம் நினைத்தது அனைத்தையும் முடிக்க ஆன்மீகம் நமக்கு உறுதுணையாக உள்ளது. நாம் நினைத்தது அனைத்தையும் நடக்க சிறிய பரிகாரத்தை செய்தால் போதும்..! அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Ninaithathu Nadaka Pariharam:
நாம் ஆசைப்பட்டது அல்லது நாம் நினைத்தது நடக்க ஆன்மீக ரீதியாக கிரகங்களின் ஆசிர்வாதம் நமக்கு மிகவும் முக்கியமானது ஆகும். நமக்கு அனைத்தும் சரியாக அமைய அந்த கடவுளுடைய அனுக்கிரகம் நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதேபோல் நாம் நினைத்து நடக்க பரிபூரணமாக கிடைக்க குரு பகவானுக்கு உகந்த பொருளான வெந்தயத்தை வைத்து தான் செய்ய போகிறோம். அது என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
வியாழக்கிழமை அன்று ஹோரையில் தான் இந்த பரிகாரம் செய்யவேண்டும். அதாவது காலை 6 மணி முதல் 7 வரை அதேபோல் மதியம் 1 முதல் 2 மணி வரை அடுத்து இரவு 8 மணி முதல் 9 மணி வரை இந்த பரிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். அதாவது இந்த 3 நேரங்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்
எப்படி செய்ய வேண்டும்:
இதற்கு ஒரு மஞ்சள் காட்டன் துணியை எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் 1 கைப்பிடி அளவு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த வெந்தயத்துடன் உங்கள் வீட்டில் உள்ள சிறிய அளவு தங்கம், வெள்ளி என இது போல் மூன்றையும் முடிஞ்சி வைக்கவேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் நினைத்தது நடக்க என்ன செய்யவேண்டுமோ அதனை மனதார நினைத்துக்கொண்டு முடிஞ்சி வைக்கவேண்டும்.
உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை வைத்தால் மட்டும் போது கடன் பிரச்சனை தீர்ந்து பணவவரவு அதிகரிக்கும்
முடிஞ்சி வைத்த அதனை பூஜை அறையில் வைத்து பூஜை செய்யும் போது அதற்கு தீப ஆராதனை காட்டி தினமும் அதற்கு பூஜை செய்யவேண்டும். அப்போது நீங்கள் நினைத்தை நினைத்து நடத்தி தரவேண்டும் என்று சொல்லி பூஜை செய்து வாருங்கள். நினைத்தது நடக்கும் அதேபோல் நடந்த பின்பு அதில் இருக்கும் வெள்ளி தங்கத்தை எடுத்து சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வெந்தயத்தை கால் படாத இடத்தில் தூவ வேண்டும்.
பணக்காரனைக் கீழ் தள்ளும் இந்த காரியத்தை செய்யாதீர்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |