உப்பு ஜாடியில் வைக்க வேண்டிய பொருள்
இன்றிய கால கட்டத்தில் கணவன், மனைவி இரண்டு நபருமே வேலைக்கு செல்கிறார்கள், ஆனால் சம்பாதிக்கின்ற பணம் எங்கே போகிறது என்று தான் தெரியவில்லை. சம்பாதிக்கின்ற பணத்தை EMI, குழு, கடன் வாங்கியதிற்கு வட்டி போன்றவற்றிற்கு பணம் செலுத்தி தீர்ந்து விடுகிறது. சம்பாதிக்கின்ற பணம் கொஞ்சமாவது கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்காகவும் நிறைய வகையான பரிகாரங்களை செய்து வருகின்றனர். அதை பெரும்பாலும் கடையில் காசு கொடுத்து தான் வாங்குகின்றனர். அதனால் இந்த பதிவில் உப்பில் ஒரு பொருளை வைத்தால் மட்டும் போதும் பணக்கஷ்டம் தீர்ந்து பணவரவு அதிகரிக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பணக்கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்:
ஆன்மிகத்தில் உப்பை மகாலட்சுமியின் உருவமாக கருதப்படுகிறது. கல் உப்பு சமையலுக்கு மட்டுமில்லை, பண பிரச்சனையை சரி செய்வதற்கும் உதவுகிறது.
உப்பை முக்கியமாக பீங்கான் ஜாடி அல்லது மண் பானையில் தான் வைக்க வேண்டும். மறந்தும் பிளாஸ்டிக் பாத்திரம், கண்ணாடி பாத்திரம், செம்பு பாத்திரம், அலுமினியம் பாத்திரம் போன்றவற்றில் வைக்க கூடாது. நீங்கள் கல் உப்பு வைக்கும் பாத்திரமானது 3 கிலோ உப்பு அதில் இருக்க வேண்டும்.
கல் உப்பு எப்பொழுதும் வீட்டில் குறையாத படி பார்த்து கொள்ள வேண்டும். கொஞ்சமாக இருக்கும் போதே கல் உப்பை வாங்கி வைத்து கொள்ளவும்.
கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்
பரிகாரம் செய்வதற்கு ஒரு மஞ்சள் துணி அல்லது சிவப்பு துணி எடுத்து கொள்ளவும். அதில் 9 கொட்டைப்பாக்கு, வெள்ளி காசு, சில்லறை காசு 1 ஏதாவது சிறிதாக தங்கம் இருந்தால் அதனையும் சேர்த்து கட்டி கொள்ளவும். இதனை கல் உப்பு வைக்கும் பாத்திரத்தில் அடிப்பகுதியில் வைத்து விட வேண்டும். இதனை சமையலறையில் வைத்து விட வேண்டும். இந்த உப்பை தினமும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். பெண்கள் தினமும் கல் உப்பை கையில் எடுத்து சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இதனை எல்லாம் வீட்டில் லட்சமி கடாட்சம் பெருகும். மேலும் கடன் பிரச்சனை தீர்ந்து விடும். பணவரவு அதிகரிக்கும்.
ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |