வீட்டு வாசலில் வைக்க வேண்டியவை
நம்முடைய வீட்டில் தினமும் அல்லது வாரத்தில் ஒரு பூஜை செய்வது வழக்கம். அதேபோல் வாசல் படியில் சிலர் தீபம் ஏற்றுவார்கள். அப்போது தான் லட்சுமி தேவி வீட்டிற்குள் வந்து வாசம் கொள்வார் என்று ஆன்மீகத்தில் சொல்லபட்டு உள்ளது. அதனை இப்போதும் செய்து கொண்டு தான் வருகிறார்கள். இது மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. ஒரு வீட்டில் மகாலட்சுமி குடிபெயர்ந்தாள் என்றால் அந்த வீட்டில் எப்போதும் சகல செல்வங்களும் இருக்கும் என்று சொல்வார்கள். அதேபோல் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். நோய் நொடிகள் ஏற்படாமல் இருக்கும். ஆகவே வீட்டில் மகாலட்சுமி இருக்கவேண்டும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/3Bfc0Gl |
மகாலட்சுமி வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும்:
மகாலட்சுமி வீட்டிற்கு வர நாம் இத்தனை காரியங்கள் செய்கிறோம். ஆனால் நாம் தாயார் வீட்டிற்கு வராமல் இருக்க தவறு செய்கிறோம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
அது என்னவென்றால் நிலைவாசல் படியை மாவு கோலம் போடுவோம். அதேபோல் குலதெய்வத்திற்கு நிலைவாசல் படி தான் ராஜ வாசல் என்பார்கள். அதேபோல் வாசலில் தான் தேவதைகள் வாசம் செய்யும் இடமாக பார்க்கப்படுகிறது.
வீட்டின் நிலை வாசலில் மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து தீபாராதனை காட்டி வழிப்படுவது இந்த லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும்.
கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்
இது அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ப்பவர்கள் சிறு சிறு தவறுகளை செய்து நாம் லட்சமி கடாட்சத்தை தடுத்துவிடும். அது என்ன தவறு என்றால் நம் வாசலில் குங்குமம் மஞ்சள் பொட்டு வைத்து வழிபாடு செய்து காலணிகளை, துடைப்பத்தை வைத்து விடுவோம். இப்படி வைக்க கூடாது என்று சாஸ்த்திரம் கூறுகிறது.
அந்த காலத்தில் இரவு தூங்குவதற்கு முன்பு இதனை வாசலில் போட்டு செல்வார்கள். அது எதற்கு என்றால் இரவு நேரத்தில் தீய சக்தியும் நம் இல்லத்தில் வரக் கூடாது என்பதால். அதேபோல் காலை நேரத்தில் அதனை எடுத்துப்போட்டு பிறகு தான் அடுத்த வேலையை செய்வார்கள்.
ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற
இப்போது அப்படி எதுவும் கிடையாது. அனைத்து நேரத்திலும் காலணிகள் துடைப்பம் வீட்டின் முன் தான் உள்ளது. அதேபோல் காலையில் வாசல் கதவை திறப்பதற்கு முன்பு பின் புறம் இருக்கும் கதவை தான் திறப்பார்கள். அதற்கு பின்பு முன் வாசல் கதவை திறக்கும் போது மஹாலட்சமி தாயாரே வருக என்று சொல்லிகொண்டே கதவை திறப்பார்கள்.
ஆகவே வீட்டு வாசலில் இனி துடைப்பம், செருப்புகளை போடாதீர்கள். அப்படி வைத்தால் உங்கள் வீட்டில் மகாலட்சமி நுழையமாட்டார். அதேபோல் மேல் சொன்ன அனைத்தையும் செய்தால் போதும் மஹாலட்சமி தாயார் வீட்டிற்குள் வருவார். அதேபோல் உங்கள் வீட்டில் மஹாலட்சமி தாயார் இருப்பார். செல்வ செழிப்பாக இருப்பீர்கள்.
உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை வைத்தால் மட்டும் போது கடன் பிரச்சனை தீர்ந்து பணவவரவு அதிகரிக்கும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |