Selva Valam Peruga
இன்றைய ஆன்மிகம் பதிவில் வீட்டில் செல்வ வளம் பெருக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது. ஒவ்வொரு மனிதனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
அதனாலேயே பணத் தேவையை அதிகரிப்பதற்கு மக்கள் சில பரிகாரங்களை செய்து வருகின்றனர். அதுபோல இந்த பதிவின் மூலம் சில பரிகாரங்களை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை தெளிவாக படித்து பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்த இடத்தில் உப்பு வைத்தால் செல்வ வளம் குறையவே குறையாது |
கல் உப்பு பரிகாரம்:
உப்பு என்பது மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பொருள் என்றே சொல்லலாம். அதனால் தான் வீட்டு கிரகப்பிரவேசம் நடைபெறும் போது கல் உப்பை பயன்படுத்தி வருகிறார்கள். நம் வீட்டில் இருக்கும் கல் உப்பானது சகல செல்வங்களை அள்ளி தரும் ஐஸ்வர்யமாக கருதப்படுகிறது.
அதனால் நீங்கள் கல் உப்பை வீட்டில் எப்படி பயன்படுத்துகிறீர்களோ அதை வைத்து தான் வீட்டில் செல்வ வளம் உண்டாகும்.
கல் உப்பு மகாலட்சுமியின் வடிவம் என்பதால் இதை வீட்டில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் வீட்டில் செல்வம் குறையாமல் அதிகரிக்கும்.
உப்பு ஜாடி வைக்க வேண்டிய இடம்:
நாம் நின்று சமைக்கும் போது கிழக்கு பார்த்து தான் சமைப்போம். அப்போது நமக்கு வலப்புறமாக தான் உப்பு ஜாடி இருக்க வேண்டும். இப்படி வலது புறமாக உப்பு ஜாடியை வைப்பதால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
அதுபோல உப்பு ஜாடியை பிளாஸ்டிக் பொருட்களில் கொட்டி வைக்க கூடாது. மாறாக உப்பை மண் பானையிலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ வைக்கலாம். கல் உப்பு இருக்கும் ஜாடி எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். கல் உப்பு ஜாடியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்ய கூடாது.
மேலும் உங்கள் வீட்டில் பணம் மழையாக பொழிய உப்பு ஜாடி வைக்கும் இடத்தில் 1 ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் உப்பு ஜாடியை வையுங்கள்.
1 ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் உப்பு ஜாடியை வைக்கும் போது நாணயத்தையே சிம்மாசனமாக கொண்டு அதன் மேல் மகாலட்சுமி தாயார் அமர்ந்து இருப்பதாக நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.அதன் காரணமாக நாம் உப்பு ஜாடிக்கு கீழ் 1 ரூபாய் நாணயத்தை வைக்கும் போது வீட்டில் இருக்கும் கடன் தொல்லை நீங்கி பணம் மழையாக பொழியும்.
கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்.. |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |