தொண்டை புண் அறிகுறிகள் | Sore Throat Symptoms in Tamil
Advertisement
இப்போது நம்முடைய உணவு முறையில் இருக்கும் மாற்றம் காரணமாக நமக்கு அடிக்கடி தொற்று ஏற்படுகிறது. அதுவும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல், அரிப்பு, புண் போன்றவை ஏற்படுகிறது. இது ஏற்படுவதற்கான முக்கிய காரணம் தொண்டைப்பகுதியில் உண்டாகும் அழற்சியாகும். இந்த அழற்சி வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது, அப்படி ஏற்படும் நோய்களில் ஒன்று தான் தொண்டை அல்சர், இந்த தொகுப்பில் தொண்டையில் அல்சர் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அறிகுறிகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தொண்டை புண் வர காரணம்:
Advertisement
தொண்டையில் புண் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வைரஸ் அல்லது ஜலதோஷமாக இருக்கலாம். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு காற்றின் மூலம் பரவுகிறது, இதனால் தொண்டை வலி அல்லது புண் ஏற்படலாம்.
அழற்சி, சுற்றுசூழல் மாசுபடுவதால், புகைபிடித்தல், மது அருந்துதல், எச்.ஐ. வி, புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவது போன்ற காரணங்களால் தொண்டையில் புண் ஏற்படும்.
தொண்டை அல்சர் அறிகுறிகள்:
தொண்டையில் ஏற்படும் புண் அல்லது வலியை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.
சாப்பிடும்போது, பேசும்போது தொண்டையில் வலி ஏற்படுதல், அரிப்பு போன்றவை தொண்டையில் அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
கழுத்து சுரப்பிகளில் அழற்சி, தொண்டை கம்மி போவது, சதை வீக்கம், தொண்டைச் சதையில் சீழ் வைப்பது போன்றவை தொண்டையில் புண் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
சில வைரஸ் தொற்றால் தொண்டை வலியோடு, காய்ச்சல், இருமல், தலைவலி, குமட்டல், வாந்தி, சளி, தும்மல், உடலில் வலி போன்ற அறிகுறிகளும் தென்படலாம்.
சளியில் இரத்தம் கலந்து வெளிப்படுவது, மூச்சு திணறல், வாயை திறப்பதில் சிரமம், ஒரு வாரத்திற்கு மேலாக குரலில் மாற்றம் காணப்படும்.
வைரஸ் தொற்றால் ஏற்படும் தொண்டை புண் 5 முதல் 7 நாட்களுக்குள் எந்த விதமான மருந்துகளும் எடுக்காமல் சரியாகி விடும். தொண்டையில் அதிக வலி அல்லது மேற்கூறப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
சாப்பிடுவதற்கு முன்பு மற்றும் அதற்கு பின்னர் கைகளை நன்றாக கழுவ வேண்டும். அதிலும் குறிப்பாக கழிவறையை பயன்படுத்திய பின்னர் கைகளை கிருமிநாசினியை பயன்படுத்தி கழுவ வேண்டும்.
இருமல், தும்மல் இருப்பவர்கள் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.
அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக அளவு உட்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு உணவுப்பொருளையும் சுத்தம் செய்யாமல் சாப்பிட கூடாது.
வெந்நீரில் சிறிதளவு கல் உப்புடன், எலுமிச்சை சாறு கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் குடித்து வந்தால் தொண்டை புண் அல்லது வலி சரியாகிவிடும்.
சூடான தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் தொண்டையில் வைரஸால் ஏற்பட்ட புண் குணமாகிவிடும்.
ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.
Disadvantages of Eating Tomatoes உணவு என்பது நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அந்த உணவினை நமக்கு பிடித்தவாறு வெவ்வேறு வகைகளில் சமைத்து சாப்பிட்டு...
தேங்காய் பூ தீமைகள் அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் வாசகர்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை கூற போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை...
Disadvantages Of Drinking Milk வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை...
Kodaikalathil Seiya Koodatha Thavarugal கோடை காலம் வந்து விட்டாலே வெயில் வாட்டி எடுக்கும். கோடை காலத்தில் நம் உடலை பாதுகாப்பதே பெரிய போராட்டமாக இருக்கும். சுட்டெரிக்கும்...
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் - Ponnanganni Keerai Benefits in Tamil நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அதில் அதிகமாக உணவில்...
Karunai Kilangu Theemai in Tamil அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம்....