ஐயர் வீட்டு தக்காளி சாதம்
குழம்பு வைத்து சாப்பிடுவதை விட தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் போன்றவையை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் இந்த சாத வகைகளை பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் போன்றோர்களுக்கு மதிய உணவாக செய்து கொடுப்போம். நாம் செய்வது ஐயர் வீட்டில் செய்யும் உணவுகள் ருசியாக இருக்கும். அதை விரும்பி சாப்பிடுவார்கள். என்ன தான் செய்கிறார்கள் இவ்வளவு ருசியாக இருக்கிறது என்று நினைப்போம். அதனால் இந்த பதிவில் ஐயர் வீட்டு தக்காளி சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
ஐயர் வீட்டு தக்காளி செய்ய தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 4 தேக்கரண்டி
- கடுகு -1/ 2 தேக்கரண்டி ,
- உளுத்தப்பருப்பு -1 தேக்கரண்டி,
- கடலை பருப்பு – 1தேக்கரண்டி ,
- சீரகம் -1/4 தேக்கரண்டி,
- சோம்பு -1/4 தேக்கரண்டி
- பட்டை, கிராம்பு- 2
- பிரியாணி இலை 1,
- நறுக்கிய வெங்காயம் -2
- கருவேப்பிலை -சிறிதளவு
- மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி,
- மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி,
- பச்சை மிளகாய்- 2
- நறுக்கிய தக்காளி -3,
- உப்பு – தேவையான அளவு
- வேக வைத்த சாதம் – 250 கிராம்
தக்காளி சாதம் செய்முறை:
முதலில் கடாய் வைத்து அதில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு 1/ 2 தேக்கரண்டி , உளுத்தப்பருப்பு 1 தேக்கரண்டி, கடலை பருப்பு தேக்கரண்டி , சீரகம் 1/4 தேக்கரண்டி, சோம்பு 1/4 தேக்கரண்டி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை 1, நறுக்கிய வெங்காயம் 2, கருவேப்பிலை சிறிதளவு, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2, நறுக்கிய தக்காளி 3, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி விடவும். தக்காளி மற்றும் வெங்காயம் சுருங்கிய பதம் வரும் வரை வதக்கவும்.
ஐயர் வீட்டு புலாவ் வீடே மணக்கும் அளவிற்கு செய்யலாம் வாங்க..
பின் அதனுடன் 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி விடவும். அதனுடன் வடித்த வைத்த சாதத்திலிருந்து 250 கிராம் எடுத்து கிளறவும். அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு, கொத்தமல்லி சிற்தளவு சேர்த்து கிளறி விடவும். அவ்ளோ தாங்க ஐயர் வீட்டு தக்காளி சாதம் ரெடி.! ஒரு முறை இந்த மாதிரி செய்து பாருங்க..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |