ஐந்தாண்டு திட்டம் | Five Year Plan in India in Tamil
இந்திய அரசின் ஐந்தாண்டு திட்டங்கள் என்பது 1947-2017 வரையில் இந்திய பொருளாதாரமானது திட்டமிடலை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்திய அரசானது 12 ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டமே (2012-2017) இறுதியான ஐந்தாண்டுத் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி 2014-ல் அமைந்தவுடன் இந்திய ஐந்தாண்டு திட்டங்கள் – திட்ட கமிசன் கலைத்து விட்டு புதிய அமைப்பாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. இந்த பதிவில் இந்திய அரசு செயல்படுத்தி வந்த ஐந்தாண்டு திட்டத்தை பற்றி ஒரு கண்ணோட்டம் பார்க்கலாம் வாங்க..
மத்திய அரசு வழங்கும் தெருவோர வியாபாரிக்கான கடனுதவி திட்டம் |
முதல் ஐந்தாண்டு திட்டம் | First Five Year Plan in India in Tamil (1951-1956):
- முதல் ஐந்தாண்டு திட்டமானது ஹாரேட் டாமர் (Harrod-Domar) மாதிரியை அடிப்படையாக் கொண்டது.
- இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மையை முன்னேற்றம் செய்வதாகும்.
- இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கை விட அதிகம்) வெற்றி பெற்றது.
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் | Second Five Year Plan in India in Tamil (1956-1961):
- இரண்டாவது ஐந்தாம் திட்டம் PC மஹலநோபிஸ் (P.C. Mahalanobis) மாதிரியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டது.
- இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்.
- இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.
மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் | Third Five Year Plan in India in Tamil (1961-1966):
- மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தை “காட்கில் திட்டம்” (Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.
- சீன – இந்தியப் போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6%-ஐ அடைய இயலவில்லை.
ஐந்தாண்டு திட்டத்தின் விடுமுறை காலம் | Five Year Plan Holiday (1966-1969):
- மூன்றாம் ஐந்தாவது திட்டம் தோல்வியும் மற்றும் இந்திய பாகிஸ்தான் போர் காரணமே இந்த திட்டத்தின் விடுமுறை காரணம்.
- இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
நான்காம் ஐந்தாண்டு திட்டம் | Fourth Five Year plan in India in Tamil (1969-1974):
- நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன. அவை: நாட்டின் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைவதாகும்.
- இத்திட்டம் அதன் இலக்கான 5.7% வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தது.
அனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம் |
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் | Fifth Five Year Plan in India in Tamil (1974 -1979):
- இந்த ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
- ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.86 வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.
- இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P.தார் (DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978-ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே) கைவிடப்பட்டது.
சூழல் திட்டம்:
- 1978-1979-ம் ஆண்டு ஒரு வருட திட்டம் காலத்திற்காக இச்சுழல் ஆரம்பம் ஆகியது.
- இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கப்பட்டது.
ஆறாம் ஐந்தாண்டு திட்டம் | Sixth Five Year Plan in India in Tamil (1980-1985):
- ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். “வறுமை ஒழிப்பு” (GARIBI HATAO) என்பதே இந்த திட்டத்தின் முதல் இலட்சியம்.
- ஆறாம் ஐந்தாண்டு திட்டம் முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
- இத்திட்டதின் வளர்ச்சி இலக்கு 5.2%. ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.
ஏழாம் ஐந்தாண்டு திட்டம் | Seventh Five Year Plan in India in Tamil (1985-1990):
- இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாகதனியார்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.
- இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.
எட்டாம் ஐந்தாண்டு திட்டம் | Eighth Five Year Plan in India in Tamil (1992-1997):
- எட்டாம் இந்தாண்டு திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
- இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபட்டது.
- இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 6%. ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் | Ninth Five Year Plan in India in Tamil (1997-2002):
- சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது.
- இத்திட்ட கால இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை.
- இந்தியப் பொருளாதாரம் 5.0% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.
பத்தாம் ஐந்தாண்டு திட்டம் | Tenth Five Year Plan in India in Tamil (2002-2007):
- இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
- இத்திட்டம் 2012-ம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது.
- இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.01. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.
பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டம் | Eleventh Five Year Plan in India in Tamil (2007-2012):
- இதன் முக்கிய நோக்கம் “விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”.
- இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.
பனிரெண்டாம் ஐந்தாண்டு திட்டம் | Twelfth Five Year Plan in India in Tamil (2012-2017):
- இதன் முதன்மை நோக்கம் “விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே” ஆகும்.
- இதன் வளர்ச்சி இலக்கு 81% ஆகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |