விருந்தோம்பல் அதிகாரம் திருக்குறள் | Virundhombal Kural
இந்த உலகத்தில் பல விதமான மொழிகள் வழக்கத்தில் உள்ளது. அதில் தமிழ் மொழி தனித்துவம் கொண்டது. தமிழில் பல நூல்கள் உள்ளது, அதில் திருக்குறள் மிகவும் பெருமைக்குரிய நூல் என்றே சொல்லலாம். இந்த திருக்குறளில் உள்ள ஒவ்வொரு அதிகாரமும், பொருளும் அன்றைய காலத்தில் உள்ள மக்கள் முதல் இன்றைய காலத்தில் உள்ள மக்கள் வரை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இத்தகைய சிறப்புகளை உடைய திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களையும், பொருளையும் தெரிந்து கொள்வோம் வாங்க.
Thirukkural Adhikaram 9
குறள்: 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
பொருள்:
இல்லத்தில் பொருட்களை சேர்த்தும், காத்தும் வாழ்வது வரும் விருந்தினரை பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆகும்.
குறள்: 82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
பொருள்:
விருந்தினரை வீட்டிற்கு வெளியே விட்டு விட்டு, தான் மட்டும் உண்பது சாகா மருந்தாக இருந்தாலும் அது நல்லதல்ல.
குறள்: 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
பொருள்:
நாடி வந்த விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, எப்போதும் துன்பம் அடைவதில்லை.
குறள்: 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
பொருள்:
புன்னகையுடனும், இனிய முகத்துடனும் விருந்தினரை உபசரிக்கும் வீட்டில் செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
குறள்: 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
பொருள்:
விருந்தினரை போற்றி அவர்களுக்கு உணவளித்து, மீதம் இருக்கும் உணவை உண்டு வாழும் நபரின் நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.
விருந்தோம்பல் திருக்குறள் விளக்கம் | Virundhombal Adhigaram
குறள்: 86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
பொருள்:
வந்த விருந்தினரை மனமகிழ்ந்து உபசரித்து வழி அனுப்பிய பின், எதிரே வரும் விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்பவரை வானில் உள்ள தேவர்கள் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
குறள்: 87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
பொருள்:
விருந்தினரை கவனிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது, வரும் விருந்தினருக்கு ஏற்றவாறு நன்மை கிடைக்கும்.
குறள்: 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
பொருள்:
விருந்தினரை உபசரித்து அதில் வரும் பயனை அடைய விரும்பாதவர்கள். செல்வத்தை சேர்த்து வைத்து அதை இழக்கும்போது நல்ல வாய்ப்பை இழந்து விட்டோமே என்று வருந்துவார்கள்.
குறள்: 89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
பொருள்:
விருந்தினரை முகமலர்ந்து உபசரிப்பதை விட வேறு பேரு எதுவும் இல்லை, அறிவில்லாதவர்களிடம் தான் விருந்தினரை உபசரிக்க கூடாது என்ற எண்ணம் இருக்கும்.
குறள்: 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
பொருள்:
முகர்ந்தாலே வாடும் அனிச்ச மலர்போல், அதுபோல இன்முகம் காட்டி உபசரிக்காத விருந்து வீணாகிவிடும்.
திருக்குறள் அதிகாரம் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |