அழுகை எதனால் வருகிறது.?
வணக்கம் நண்பர்களே.! உங்களுக்கு ஏதாவது கஷ்டம் வரவும் போது அழுகை வருகிறது என்றால் அது இயற்கை. ஆனால் உங்களுக்கு மனதுக்கு பிடித்தவருக்கு ஏதவாது கஷ்டம் வரும் போது அது உங்களுக்கு அறிகுறியாக கண்களில் கண்ணீர் தோன்றும். இந்த உணர்வு உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா.! வாங்க இதற்கான காரணம் என்னவென்று இந்த பதிவில் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.
ஒருவரை பற்றி நினைக்கும் போது ஏன் அழுகை வருகிறது.?
உங்களின் உறவினருக்கு ஒரு கஷ்டம் ஏற்படுகிறது என்றால் அது உங்களுக்கு உணர்த்தும். அது எப்படி என்றால் இரத்த சம்மந்தப்பட்ட உறவுகளுக்கு ஒரு கஷ்டம் ஏற்படும் போது உங்களுக்கு நமக்கு நெருக்கமானவர்கள் ஏதோ கஷ்டத்தில் இருக்கின்றனர் என்பதை உணர்த்தும். அது உங்களின் உடலில் ஒரு மாதிரியான பதற்ற நிலையை தரும். சரி நீங்கள் கேட்கலாம் இவர்கள் இரத்த சம்மந்தப்பட்ட உறவுகள் என்பதால் உணர்வுகளை உணர்த்துகின்றது. இரத்த சம்மந்தப்பட்ட உறவுகள் இல்லையென்றாலும் மனதிற்கு பிடித்தவர்களை பற்றி நினைக்கும் போதும் எதனால் அழுகை வருகிறது.
இதையும் படியுங்கள் ⇒ கண்ணீர் விட்டு அழுவதன் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..?
ஒருவரை பற்றி நினைக்கும் போது அழுகை வருகிறது என்றால் அவர்களும் நீங்களும் அளவுக்கு அதிகமாக விரும்பும் போது ஆற்றல் பகிரப்படுகிறது. இந்த ஆற்றல் ஆழ்மனதில் பதிகின்றது. அதனால் தான் இரத்த சொந்தத்தை விட வலிகள் அதிகமாக இருக்கும்.ஒரு எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் உங்களது உறவினர் யாராவது இறந்து விட்டால் அழுகை மட்டும் தான் வரும். அதுவே நீங்கள் ஆழ்மனதில் நீங்கள் ஒருவரை நினைத்திருப்பீர்கள் அவர்கள் உங்களை விட்டு விலகி சென்றாலும் சரி, இறந்து விட்டாலும் சரி உங்களுக்கு பைத்தியம் பிடித்தது போல் இருக்கும். மேலும் நாமும் இந்த உலகத்தில் இருக்க கூடாது என்றெல்லாம் எண்ணம் தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களை பற்றிய எண்ணம் வந்து கொண்டே இருக்கும். அவர்களை பற்றி நினைக்கும் போதெல்லாம் அழுகையும் வருகிறது.
இப்போது மனதிற்கு பிடித்தவரை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஏன் அழுகை வருகிறது என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்களின் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது கஷ்டமா இருக்கா..! இனி கவலை வேண்டாம்..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |