பெண்கள் பருவம் அடைதல்
நம் முன்னோர்கள் காலத்தில் 14 அல்லது 15 வயதில் தான் பருவமடைந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் 10 வயதிற்குள்ளையே பருவமடைந்து விடுகிறார்கள். ஓடி விளையாட வேண்டிய வயதில் பருமவடைவதற்கு வாழ்க்கை முறை முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைவதற்கு காரணம் என்ன என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைவதற்கான காரணம்:
பெண்கள் மாதவிடாய் மாதம் மாதம் சரியாக வருவதற்கு இதை மட்டும் செய்யுங்கள்..!
உடல் பருமன்:
பெண் குழந்தைகள் சீக்கிரம் பருவமடைவதற்கு உடல் பருமன் முக்கிய காரணமாக இருக்கிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் ஈஸ்ட்ரோஜன் இன்சுலின் அளவை அதிகரித்து சீக்கிரம் பருவமடைவதற்கு காரணமாக இருக்கிறது. அதனால் குழந்தைகளை விளையாட சொல்லி உடல் எடையை சரியாய் வைத்து கொள்ள உதவி செய்யுவும்.
இராசயனம் சார்ந்த உணவு பொருட்கள்:
இரசாயனம் கலந்த உணவு பொருட்களை சாப்பிடுவதும், விரைவாக பருவமடைவதற்கு காரணமாக இருக்கிறது. அடுத்து பிளாஸ்டிக்கீழ் இருக்கும் உணவு பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள `பிஸ்பீனால் ஏ’ (Bisphenol A), தாலேட்ஸ் (Phthalates) போன்ற வேதிப் பொருள்கள் ஹார்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தி பருவமடைவதற்கு காரணமாக இருக்கிறது. உணவு பொருட்கள் முதல் தண்ணீர் குடிப்பது வரை பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது.மாதவிடாய் காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..?
நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது:
குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி கொடுப்பதை தவிர்த்து, காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால்:
குழந்தைகளுக்கு தாய்ப்பாலை 1 வருடத்திற்கு சரியாக கொடுத்தால் பருவமடைதல் சரியான வயதில் நடைபெறும்.
நெய்:
நெய் அல்லது நெய் சார்ந்த உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது இதில் இருக்கின்ற RSBT என்ற செயற்கை புரதம் பெண்களுக்கு மார்பக வளர்ச்சியையும், மாதவிடாய்களையும் தூண்ட கூடியது.
மன அழுத்தம்:
குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் பொழுது, ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு சீக்கிரம் பருவமடைவதற்கு காரணமாக இருக்கிறது.
சீக்கிரம் பருவமடைவதை தடுப்பது எப்படி.?
பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களில் வைத்து தண்ணீர், ஜூஸ், உணவு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பசும்பாலை கொடுக்கலாம், ஆனால் செயற்கையாக உள்ள பால்களை கொடுக்க கூடாது.
பெற்றோர்களே குழந்தைகள் ஓடி விளையாட வேண்டிய வயதில் பருவமடைந்து அவர்களை முடடைகி வைக்கிறது. அதனால் குழந்தைகளை மேல் கூறப்பட்டுள்ளவை போல் பராமரித்து குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.!
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்வது? | Immediately Periods Tips in Tamil
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |