Flowering Plants Grow Fertilizer
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! நம் அனைவருக்குமே வீட்டை சுற்றி அழகான பூச்செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்றைய நிலையில் அனைவரின் வீடுகளிலும் மரங்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் செடிகள் அதிகமாகவே இருக்கிறது. இன்றைய நிலையில் அனைவருமே மாடித்தோட்டம் ஓன்று அமைத்து செடிகளை வளர்த்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மாடித்தோட்டத்தில் விவசாயமே செய்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.
ஆனால் சிலருக்கு இருக்கும் கவலை என்னவென்றால் மற்றவர்களின் வீட்டில் செடிகள் நன்றாக வளர்கிறது. ஆனால் நம் வீட்டில் மட்டும் ஏன் செடிகள் வளரவில்லை என்று சொல்லி புலம்புவார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு. நாம் இந்த பதிவில் காய்ந்த செடிகள் கூட 3 நாட்களில் துளிர்விடும் கரைசல் தயாரிப்பது எப்படி.? என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
வளராத செடிகளை கூட செழிப்பாக வளரவைக்க இந்த ஒரு பொருள் மட்டும் போதும் |
Flowering Plants Grow Fertilizer in Tamil:
காய்ந்து வாடிப்போன செடிகளில் இந்த கரைசலை ஊற்றினால் போதும் செடிகள் 3 நாட்களில் துளிர்விட ஆரம்பித்துவிடும். அந்த கரைசல் எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம்.
முதலில் 2 அல்லது 3 எலுமிச்சை பழம் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை 4 துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
அடுத்து நாம் எடுத்து கொள்வது பழைய சாதத்தின் தண்ணீரை தான். அதாவது நம் வீட்டில் மீந்து போன சாதத்தை என்ன செய்வோம். தண்ணீர் ஊற்றி வைப்போம் அல்லவா..! அப்படி மீந்து போன சாதத்தை தண்ணீரில் 3 நாட்கள் வரை வைக்க வேண்டும்.
வாடிய ரோஜா செடியில் கூட பூக்கள் பூக்க வைக்கலாம்..! அதுக்கு இப்படி செய்யுங்க..! |
பின் அந்த நீரை மட்டும் வடிகட்டி ஒரு பக்கெட்டில் ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் நாம் துண்டு துண்டாக நறுக்கி வைத்துள்ள எலுமிச்சை போட்டு 1 நாள் முழுவதும் மூடி வைக்க வேண்டும்.
பிறகு மறுநாள் இந்த தண்ணீருடன் மேலும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம். இந்த தண்ணீரை வாடிய செடிகள், பூச்செடிகள் மற்றும் காய்கள் காய்க்கும் செடிகள் என்று அனைத்திற்கும் ஊற்றலாம். இதுபோல தொடர்ந்து செடிகளுக்கு ஊற்றி வந்தால் காய்ந்த செடிகள் கூட துளிர்விட ஆரம்பிக்கும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க இதை மட்டும் செய்யுங்கள்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |