Novel Writer S.Kandasamy Life History in Tamil
நமது தமிழ் மொழியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளது. அதில் சில புத்தகங்கள் நமது மனதுக்கு பிடித்தாக இருக்கும். அப்படி உங்களின் மனதிற்கு பிடித்த புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று என்றாவது ஆசைப்பட்டுள்ளீர்களா..? அப்படி ஆசைப்படுபவர்களுக்காக தான் இந்த பதிவு. ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு தமிழ் எழுத்தாளர் வாழ்க்கை வரலாற்றினை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ் எழுத்தாளர் சா. கந்தசாமியின் வாழ்க்கை வரலாறு பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 எழுத்தாளர் நா.சொக்கன் வாழ்க்கை வரலாறு
Tamil Writer S.Kandasamy Life History in Tamil:
சா. கந்தசாமி 1940 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். 1968-ஆம் ஆண்டு இவர் எழுதிய சாயாவனம் என்னும் புதினம் மிகவும் பிரபலமானது.
இந்த புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. இவர் ஜவஹர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை தனது இலக்கிய வாழ்க்கைக்கான அடி தளமாக அமைத்து கொண்டார்.
இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (Terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டது.
தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியை பாராட்டும் வகையில் 1995-ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (Fellowship) வழங்கி ஊக்குவித்தது.
இவர் உடல் நலக்குறைவின் காரணமாக 31 ஜுலை 2020 அன்று காலமானார்.
படைப்புகள்:
- சாயாவனம்
- ஏரிக்கரையில்
- அவன் ஆனது
- தக்கையின் மீது நான்கு கண்கள்
- விசாரணைக்கமிசன்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உடையும் இந்தியா என்னும் நூலை எழுதிய எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் பற்றிய சில குறிப்புகள்
விருதுகள்:
1998ல் விசாரணைக் கமிசன் என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியை பாராட்டும் வகையில் 1995- ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (Fellowship) வழங்கி ஊக்குவித்தது.
இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு”என்னும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள் என்ற சிறுகதையை எழுதிய நாஞ்சில் நாடன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |