வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அமாவாசை பௌர்ணமி வருவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Updated On: February 20, 2026 5:43 PM
Follow Us:
Amavasai Pournami Scientific Reason in Tamil
---Advertisement---
Advertisement

Amavasai Pournami Scientific Reason in Tamil

இனிமையான நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அமாவாசை பௌர்ணமி எப்படி வருகிறது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். மாதத்தில் ஒரு நாள் பௌர்ணமி ஒரு நாள் அமாவாசை வரும். பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு இருக்கும். அதுபோல அமாவாசை அன்று வானில் நிலவு இருக்காது. அமாவாசை பௌர்ணமி எப்படி வருகிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..? அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 இடி இடிக்கும் போது ஏன் “அர்ஜுனா” என்று சொல்கிறோம் காரணம் தெரியுமா..?

அமாவாசை பௌர்ணமி வர காரணம் என்ன..? 

பௌர்ணமி அன்று முழு நிலவு இருப்பதால் அது நிலவின் வளர்பிறை என்றும், அதேபோல அமாவாசை அன்று நிலவு இல்லாததால் அது நிலவின் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.

இதை தான் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நாம் கூறிக்கொண்டு வருகிறோம். ஆனால் உண்மையில் நிலவு வளர்வதும் இல்லை தேய்வதும் இல்லை.

பூமி சூரியனை சுற்றி வருகிறது. அது நம் அனைவருக்குமே தெரியும். அதுபோல பூமியின் துணை கோள் என்று சொல்ல கூடிய நிலவு பூமியை சுற்றி வருகிறது.

 நிலவு பூமியை சுற்றி 1 முறை வலம் வருவதற்கு 29 1/2 நாட்கள் ஆகிறது. இருந்தாலும் நிலவுக்கு சூரியனிடம் இருந்து தான் ஒளி கிடைக்கிறது. நிலவானது சூரியனிடம் இருந்து பெற்ற ஒளியை எந்த அளவிற்கு பூமியில் பிரதிபலிக்கிறதோ அதை வைத்து தான் அம்மாவாசை பௌர்ணமி நிகழ்கிறது.  

அமாவாசை எப்படி வருகிறது..? 

அமாவாசை எப்படி வருகிறது

பொதுவாக  பூமியில் இருந்து நிலவின் ஒரு பகுதியை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். அதுபோல நிலவானது பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சுற்றி வரும் போது, நமக்கு தெரியாத நிலவின் வேறு பகுதியில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது . சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும்போது, சந்திரனின் ஒளியற்ற பகுதி பூமியை நோக்கி இருக்கும். இதனால் நமக்கு சந்திரன் தெரியாது இதை தான் நாம் அமாவாசை என்று சொல்கிறோம்.

பௌர்ணமி எப்படி வருகிறது..? 

பௌர்ணமி எப்படி வருகிறது

அதுபோல அமாவாசை முடிந்து சில நாட்கள் வரை நிலவின் மீது ஒளி இருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலவின் மீது ஒளியின் பிரதிபலிப்பு அதிகமாகும்.

பின்பு  பூமிக்கு எதிரே இருக்கும் நிலவின் முழு பகுதியிலும் சூரிய ஒளிபடுகிறது. அந்த நேரத்தில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி இருப்பதால், நிலவானது சூரிய ஒளியை முழுமையாக பெற்று பிரதிபலிக்கிறது.  இதை தான் நாம் பௌர்ணமி என்று சொல்கிறோம்.

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

அமாவாசை அன்று காகத்திற்கு உணவு அளிப்பது ஏன் தெரியுமா.?

Cochineal Lipstick

பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா?

muhurthakaal in tamil

திருமணத்தின் போது முகூர்த்த கால் நடுவது ஏன் என்று தெரியுமா..? இதுதான் காரணம்.!

Pulla Poochi Yen Kolla Kudathu

புள்ள பூச்சியை கொன்றால் குழந்தை பிறக்காது என்று சொல்ல காரணம் தெரியுமா?

spirituality and scientific reason in tamil

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் நமக்கே தெரியாத பல அறிவியல் காரணங்கள்.!

கண்ணை திறந்துகொண்டே தூங்கும் பறவை எது தெரியுமா ?

மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு ஏன் 6 மணிக்கு மேல் கண் தெரிவதில்லை என்று உங்களுக்கு தெரியுமா.?

Do you know why your eyes water when you yawn in tamil

கொட்டாவி விட்டால் ஏன் கண்களில் தண்ணீர் வருகிறது தெரியுமா..?

double banana, will you give birth to twins in tamil

இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்குமா.!