பூனை வளர்த்தால் ஆஸ்துமா வருமா

Advertisement

பூனை வளர்த்தால் ஆஸ்துமா வருமா!

பெரும்பாலான வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பார்கள். இந்த செல்ல பிராணிகளை தூரத்தில் வைத்து தான் வளர்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. நம் வீட்டில் உள்ள மனிதர்கள் போலவே தான் அதையும் வளர்ப்பார்கள் . சாப்பிடு கொடுப்பது, பக்கத்தில் தூங்க வைப்பது போன்ற செயல்களை செய்வார்கள். இந்த செல்ல பிராணிகள் வளர்ப்பது நம்முடைய மன அழுத்தத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கும். ஏனென்றால் இதனுடன் விளையாடுவதன் மூலம் நாம் மகிழ்ச்சி அடைவோம். அதில் பூனை நிறைய பேர் வீட்டில் வளர்ப்பார்கள். அதில் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பூனையை கொஞ்சதே, கிட்ட போகாதே ஆஸ்துமா வரும் என்று கூறுவார்கள். இது உண்மையா என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

பூனை வளர்த்தால் ஆஸ்துமா வருமா இது உண்மையா:

பூனை வளர்த்தால் எல்லாருக்கும் ஆஸ்துமா வரும் என்று கூற முடியாது. சில பேருக்கு பூனையின் முடி அல்லதழும்புகளால் அலர்ஜி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அலர்ஜி ஆனது ஆஸ்துமாவாக மாற வாய்ப்புள்ளது.

அலர்ஜி வருவது எப்படி.?

பூனை வளர்த்தால் ஆஸ்துமா வருமா

 செல்ல பிராணிகளின் உடலில் இருந்து வரும் செல்கள், ரோமம், உமிழ்நீர், சிறுநீர், மலக் கழிவு ஆகியவை காற்றில் கலந்து நாசி, சரும அலர்ஜியை ஏற்படுத்தும். இவை கண்ணுக்கு தெரியாத வகையில் இருக்கும். எனவே, வீட்டில் இருக்கும் துணிகள், சன்னல் திரைச்சீலைகள், சோபா செட்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மிதியடிகள், கழிவறை உபகரணங்கள், கைப்பிடிகள் போன்றவற்றில் ஒட்டிக்கொள்ளும். இவை நாளடைவில் நம்முடைய உடலிற்கு சென்று அலர்ஜியை ஏற்படுத்தும். வீட்டில் உள்ள செல்ல பிராணிகள் வளர்க்கும் போது நாம் அதனை தொட்டு தூக்கும் போது மேல் கூறியுள்ள செயல்களில் மூலம்  நம்முடைய உடலிற்குள் சென்று அலர்ஜியை ஏற்படுத்துகிறது. 

அலர்ஜிப் பொருட்கள் உடலுக்குள் சென்றவுடன், அவை ஆன்டிஜென்களாக (antigens) செயல்படுகின்றன. இதனையடுத்து, ரத்தத்தில் ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE) என்ற எதிர்ப்புரதம் உருவாகி, அந்த ஒவ்வாமைப் பொருளுடன் இணைந்து மாஸ்ட் செல்களைத் தூண்டுகிறது. இதனால், மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’ மற்றும் ‘லியூகோட்ரின்’ (Leukotriene) போன்ற வேதிப்பொருட்களை வெளியேற்றி, ரத்தக்குழாய்கள் விரிவடைவதற்கும் நரம்புமுனைகள் தூண்டப்படுவதற்கும் காரணமாகின்றன. இதன் விளைவாக, மூக்கு ஒழுகல், தும்மல், தேளைச்சினம், அரிப்பு, சருமம் சிவத்தல், வீக்கம் மற்றும் ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றுகின்றன

எப்படி செல்ல பிராணிகளை வளர்க்க வேண்டும்:

உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருக்கிறது என்றால் நீங்கள் செல்ல பிராணிகளை வளர்க்காமல் இருப்பதே நல்லது.  இல்லை எனக்கு வளர்க்க ஆசையாக இருக்கிறது என்றால் அதனை நீங்கள் வீட்டிற்குள் வளர்க்காமல் தனியாக அதாவது வீட்டிற்கு வெளியே வைத்து வளர்க்க வேண்டும்.

வீட்டிற்குள் வளர்ப்பவர்கள் முக்கியமாக படுக்கை அறைக்கு வராமல் வளர்ப்பது நல்லது. செல்ல பிராணிகளை தொட்டு தூக்ககூடாது. அதனை கொஞ்சுவதோ, முத்தமிடுவதோ கூடாது.

வீட்டில் உள்ள ஜன்னல், காட்டில் மாறும் துணிகளை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பெட்சீட்,  ஸ்கீரின் துணி போன்றவற்றை வாரத்தில் ஒரு நாள் வெந்நீரில் அலச வேண்டும்.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement