வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இலைகள் ஏன் பச்சை நிறமாக உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.?

Updated On: October 15, 2025 4:55 PM
Follow Us:
Why Leaf Is Green Colour in Tamil
---Advertisement---
Advertisement

Why Leaf Is Green Colour in Tamil | இலைகள் ஏன் பச்சை நிறமாக உள்ளது

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் வாழும் பூமியில் இயற்கையால் கொடுக்கப்பட்ட ஆச்சர்யமான விஷயங்கள் அதிகமாகவே உள்ளன. நாம் சிறுவயதிலிருந்தே இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். இலைகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது என்ற கேள்விகள் நம் அனைவரிடத்திலும் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருப்போமா..? அதற்கான பதிலை எங்கள் பொதுநலம்.காம் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இலைகள் பச்சை நிறத்தில் இருக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஏன் பச்சை நிறமாக இருக்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்து இருக்கிறீர்களா.? அப்படி யோசித்து இருந்தால், இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?

இலைகள் ஏன் பச்சை நிறத்தில் உள்ளன:

இலைகள் ஏன் பச்சை நிறத்தில் உள்ளன

  • நாம் வாழும் பூமியில் இருக்கும் மரம், செடி, கொடிகள் எல்லாம் பச்சை நிறத்தில் இருக்கின்றன. அதை நாம் பார்த்திருப்போம். ஏன் இலைகள் பச்சை நிறத்தில் இருக்கின்றன. அதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம் வாங்க.
  • ஒரு செடி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது வேர்கள் தான். இது செடிக்கு தேவையான ஆற்றலை பூமியில் இருந்து பெற்று கொடுக்கிறது.
  • ஒரு செடி அல்லது மரம் வளர தேவையான உணவை அந்த செடியில் இருக்கும் வேர், இலை, தண்டு மற்றும் பூக்கள் போன்ற பாகங்களே தயாரித்து கொள்கின்றன. இப்படி செடியில் இருக்கும் பாகங்களே தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்கும் முறையை தான் PHOTOSYNTHESIS என்று கூறுகிறோம்.
  • இதுபோல அவை உணவு தயாரிக்கும் போது வெளிவரும் கழிவுகள் தான் ஆக்ஸிஜனாக மாறுகிறது. அந்த ஆக்ஸிஜனை தான் நாம் சுவாசிக்கிறோம்.
  • அதேபோல நிறங்கள் உருவாக முக்கிய காரணமாக இருப்பது சூரிய ஒளி தான். இந்த ஒளியில் இருந்து வரும் நிறங்கள் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் என 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
  • இந்த நிறங்கள் தான் மழைக் காலங்களில் வானவில்லாக தெரிகிறது. இதுபோல தான் சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று ஒவ்வொரு பொருளும் அதற்கேற்றவாறு நிறத்தை பிரதிபலிக்கின்றன.
  • இலைகள் பச்சை நிறமாக இருப்பதற்கு முக்கிய காரணம் இலைகளில் இருக்கூடிய குளோரோஃபில் தான். இந்த குளோரோஃபில் இயற்கையாகவே தன்னுள் பச்சை நிறத்தை கொண்டுள்ளது.
  •  குளோரோஃபில் என்பது மரம் மற்றும் செடிகளுக்கு தேவையான உணவை சூரிய ஒளியிலிருந்து பெற்று தருகிறது. அந்த நேரத்தில் சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய சிவப்பு மற்றும் நீல நிற ஒளியை மட்டும் செடிகள் உட்கொள்கிறது. அதேபோல பச்சை நிறத்தை செடிகள் உட்கொள்ளாமல் பிரதிபலிக்கின்றது. இதன் காரணமாக தான் இலைகள் பச்சை நிறத்தில் இருக்கின்றன.  
  • இந்த குளோரோஃபில் பச்சை நிறமாக இல்லாமல் வேறு நிறத்தில் இருந்திருந்தால் இலைகளும் வேறு நிறத்தில் இருந்திருக்கும். இதனால் தான் மரங்கள் பட்டுப்போன பிறகு இலைகளும் அதன் நிறத்தை இழந்து விடுகின்றன.
  • இலைகள்  பச்சையாக இருக்க காரணம்.அவற்றில் பச்சையம் என்ற நிறமி ஆகும். இந்த பச்சையம் நீல மற்றும் சிவப்பு நிறங்களை உறிஞ்சி பச்சை நிறத்தை பிரதிபலிப்பதால் இலைகள் பச்சை நிறத்தில் தோன்றுகின்றன.

பனிக்காலத்தில் செடியில் இருக்கும் இலைகள் மற்றும் பூக்கள் உதிராமல் இருக்க இப்படி செய்யுங்கள்..!

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Cochineal Lipstick

பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா?

why do we yawn if others yawn in tamil

ஒருவருக்கு கொட்டாவி வந்தால் நமக்கும் கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா..?

Facts About Crow in Tamil

காகத்தின் அருமை அறியாத மக்கள்..!

Why Do We Put Kolam in Tamil

வாசலில் கோலம் போடுவதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Gen Z Meaning in Tamil

1997 – 2012-க்குள் பிறந்தவர்களா நீங்கள்? அதிர்ச்சி கொடுக்கும் மெடிக்கல் ரிப்போட்..!

பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிய வேண்டும் வலது பக்கமா.. இடது பக்கமா..?

poonai kadithal enna seiya vendum

பூனை நம்மை கடித்து விட்டால் என்ன செய்வது? என்ன சாப்பிட கூடாது ?

why should a husband not get a haircut and face-shaving during his wife’s pregnancy

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் ஏன் முடி வைத்திருக்கிறார்கள்

muhurthakaal in tamil

திருமணத்தின் போது முகூர்த்த கால் நடுவது ஏன் என்று தெரியுமா..? இதுதான் காரணம்.!