கிர் சரணாலயம் உள்ள மாநிலம் | Gyr Saranalayam Ulla Maanilam Ethu
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்றைய பொது அறிவு சார்ந்த பதிவில் கிர் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது என்று படித்து தெரிந்துகொள்ளலாம். பொது அறிவு கேள்விகளானது அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயன்பட கூடிய ஒன்று. தேர்வுகளுக்கு மட்டுமல்லாமல் நமது அறிவு திறனை மேம்படுத்துவதற்கும் பொது அறிவு மிகவும் பயன்படுகிறது. பள்ளி பயிலும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைத்து தேர்வாளர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று நம்புகிறோம். வாங்க இப்போது எந்த மாநிலத்தில் கிர் சரணாலயம் அமைந்துள்ளது என்று கீழே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
இந்திய தேசிய நூலகம் அமைந்துள்ள இடம் |
கிர் சரணாலயம் எங்குள்ளது?:
விடை: குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது.
கிர் தேசிய பூங்கா:
இந்த பூங்காவானது சிங்கங்களுக்கென்றே தனித்துவம் பெற்ற சரணாலயமாக விளங்குகிறது. இந்த சரணாலயமானது 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவினை கொண்டுள்ளது. இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன.
சிங்கங்களின் கணக்கீடு:
கிர் தேசிய பூங்காவில் மொத்தம் 523 சிங்கங்கள் வாழ்கின்றன. அவைகளில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் இளஞ்சிங்கங்கள் 213 ஆக உள்ளது என்று கணக்கீட்டாளர்கள் கூறியுள்ளனர்.
கிர் தேசிய பூங்காவில் வாழும் மற்ற விலங்குகள்:
கிர் சரணாலயத்தில் காட்டுப் பன்றிகள், புள்ளிமான், கடம்பை மான், இந்தியச் சிறுமான், மலைப் பாம்புகள், முதலைகள், காட்டு மாடுகள் போன்ற மற்ற விலங்கினங்களும் இங்கு வாழ்கின்றது.
இந்த சரணாலயத்தில் பாலை வன பூனைகள் மற்றும் அதிக புள்ளிகள் நிறைந்த அறிய வகை பூனைகள் இருந்தாலும் அந்த விலங்குகளை அவ்வளவு சுலபமாக நாம் பார்க்க முடியாது. ரசெல்ஸ் வைபெர்ஸ், சா-ஸ்கேல்ட் வைபெர்ஸ் மற்றும் க்ரைட்ஸ் போன்ற வகையான பாம்புகளை இங்கே நாம் காணலாம்.
இங்கே அதிக அளவில் மார்ஷ் முதலைகள், ஸ்டார் ஆமைகள், லேசான ஓடுகளை கொண்ட ஆமைகள், மானிட்டர் பல்லிகள் மற்றும் இந்திய மலை பாம்புகளும் உள்ளன.
சூரிய கடவுளுக்கான கோவில் அமைந்துள்ள இடம் எது தெரியுமா? |
சரணாலயத்தில் சிங்கம் தண்ணீர் அருந்தும் காட்சி:
இந்த கிர் சிங்க சரணாலயத்தில் சிங்கங்கள் தண்ணீர் அருந்துவதற்கு தனியாக வராமல் அனைத்து சிங்கங்களும் ஒன்றுக்கூடி ஒற்றுமையாக தண்ணீர் அருந்திவிட்டு செல்கின்றன.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |