வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எட்டுத்தொகை நூல்கள் யாவை | Ettuthogai Noolgal yavai

Updated On: February 27, 2025 1:48 PM
Follow Us:
Ettuthogai Noolgal Names in Tamil
---Advertisement---
Advertisement

எட்டுத்தொகை நூல்கள் யாவை ஆசிரியர் பெயர்கள் | Ettuthogai Noolgal Names in Tamil

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியத்தில் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள், ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.

எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து, சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள், கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர். சரி இந்த பதிவில் எட்டுத்தொகை ஒவ்வொரு நூலையும் தொகுத்தவர் யார்? தொகுக்க உதவியவர் யார்? என்பதை படித்தறியலாம்.

எட்டுத்தொகை நூலின் சிறப்புகள்:

  • எட்டுத்தொகை என்பது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான தொகுப்புகளில் ஒன்றாகும்.
  • இது எட்டு தொகுப்புகளாக அமைந்துள்ளது.
  • சங்க காலத்தில் வாழ்ந்த பல சிறந்த புலவர்களின் பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
  • பெரும்பாலும் அகநானூறு, புறநானூறு போன்ற தொகுப்புகள் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
  • இவை வாழ்க்கை முறைகள், காதல், வீரத்துறைகள், அரசியல், சமூக நிலையைக் குறித்து கூறுகின்றன.

எட்டுத்தொகை நூல்கள் யாவை & ஆசிரியர் பெயர்கள் – Ettuthogai Noolgal Names and Authors in Tamil :

எட்டுத்தொகை நூல்கள் தொகுத்தவர் தொகுப்பித்தவர்
நற்றிணை பெயர் தெரியவில்லை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை பூரிக்கோ பெயர் தெரியவில்லை
ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுப்பத்து பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை
பரிபாடல் பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை
கலித்தொகை நல்லந்துவனார். பெயர் தெரியவில்லை
அகநானூறு உத்திர கண்ணனார். பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
புறநானூறு பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை

இந்த நூல்கள் சங்க கால மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கின்றன. தமிழின் பழமையான இலக்கிய மரபுகளைக் கண்டறிய எட்டுத்தொகை முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.

நற்றிணை:

  • நற்றிணை 400 பாடல்களை கொண்டுள்ளது.
  • இந்நூல் காதல் தலைப்புகளை விவரிக்கிறது.
  • இந்நூலை பல புலவர்கள் இயற்றியுள்ளனர்.

குறுந்தொகை:

  • குறுந்தொகை 400 பாடல்களை கொண்டுள்ளது.
  • இந்நூல் அகப்பொருள் சார்ந்த பாடல்களாக அமைந்துள்ளது.
  • இதில் சிறிய விருத்தப்படிகள் காணப்படுகின்றன.

ஐங்குறுநூறு:

  • ஐங்குறுநூறு நூலை ஐந்து புலவர்கக்ள் இயற்றியுள்ளனர்.
  • ஒவ்வொருவரும் 100 பாடலால் எழுதியுள்ளனர்.
  • இந்நூல் அகப்பொருள் பாடல்களாக அமைந்துள்ளது.

பரிபாடல்:

  • இந்நூல் 70 பாடல்களை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில பாடல்களே கிடைத்துள்ளன.
  • இது கடவுளைப் போற்றும் பாடல்களையும், அரங்கெங்கும் நிகழும் விழாக்களைப் பற்றிய பாடல்களையும் உள்ளடக்கியது.

கலித்தொகை:

  • சங்க இலக்கியத்தில் ‘கலி விருத்தம்’ (ஒன்றியத் தொடர் விதி) பயன்படுத்தப்பட்ட நூல்.
  • பல புலவர்கள் இணைந்து இயற்றிய தொகுப்பு.
  • பெரும்பாலும் காதல் மற்றும் வாழ்வியல் கருத்துகளை எடுத்துரைக்கின்றன.

அகநானூறு:

  • இந்நூல் 400 பாடல்களை கொண்ட அகப்பொருள் நூலாகும்.
  • பெண்களின் உணர்வுகளை மிக நுட்பமாக விவரிக்கிறது.
  • சங்க காலத்திலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கிய உலகில் புகழ்பெற்ற நூலாக கருதப்படுகிறது.

புறநானூறு:

  • இந்நூல் 400 பாடல்களை கொண்டுள்ளது.
  • பெரும்பாலும் அரசியல், போராட்டம், வீரத்துறைகள் பற்றிய பாடல்களைக் கொண்டுள்ளது.
  • போரில் வீழ்ந்த வீரர்களை போற்றும் பாடல்களும் இதில் காணப்படும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் மேற்கணக்கு நூல்கள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now