குடியரசு தின தலைமை விருந்தினர் 2025 யார்?
இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 இல் நடைமுறைக்கு வந்தது, இந்தியாவை ஒரு ஜனநாயகக் குடியரசாக உறுதிப்படுத்தியது. ஜனவரி 26, 1951 அன்று இந்தியா முதல் முறையாக குடியரசு தினத்தை அனுசரித்தது. 2025 இல், ஜனவரி மாதம், 26 ஆம் தேதி, அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.
குடியரசு தின அணிவகுப்பிற்கு 1950 முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைமை விருந்தினரை அழைப்பது வழக்கமாகும். வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்புகளை தேர்வு செய்வதும் நீட்டிப்பதும் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்பாகும். நம் இந்தியா முதல் குடியரசு தின அணிவகுப்பின் முதல் தலைமை விருந்தினர் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
குடியரசு தின வாழ்த்துக்கள் 2025
குடியரசு தின அணிவகுப்பு என்றால் என்ன?
குடியரசு தின அணிவகுப்பு என்பது, இந்தியாவின் குடியரசு தின விழாவையொட்டி, டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழா. இந்த அணிவகுப்பில், பல்வேறு மாநிலங்களின் குழுக்கள், ஆயுதப் படைகள், பள்ளி மாணவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த அணிவகுப்பு, குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை நடக்கும். இந்த அணிவகுப்பு, 1950 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
குடியரசு தின சிறப்பு விருந்தினர் தேர்வு:
வெளிநாட்டுத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் அமைச்சகம் பல காரணிகளைக் கருத்தில் கொள்கிறது. சம்பந்தப்பட்ட நாட்டுடனான இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ உறவு போன்ற காரணிகளை இது கருதுகிறது. வெளிநாட்டுத் தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, அந்தத் தேதியில் வெளிநாட்டுத் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று அமைச்சகம் விசாரிக்கிறது. வெளிநாட்டுத் தலைவர்கள் ஒப்புக்கொண்டால், இந்தியப் பிரதமர் சார்பாக வெளிநாட்டுத் தலைவருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படும்.
குடியரசு தின அணிவகுப்பின் முதல் தலைமை விருந்தினர்:
- முதல் தலைமை விருந்தினர் – ஜனவரி 26, 1950 அன்று நடந்த இந்தியாவின் முதல் குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்னோ தொடக்க தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார்.
- முதல் பெண் தலைமை விருந்தினர் – ஜனவரி 26, 1961 குடியரசு தின அணிவகுப்பில் ஐக்கிய இராச்சியத்தின் ராணி எலிசபெத் II தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார்.
இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்னோ:
சுகார்னோ இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பாற்றியவராவார். நெதர்லாந்திடமிருந்து தமது நாடு விடுதலை பெற நடைபெற்ற போராட்டத்தின் தலைவராக சுகர்ணோ விளங்கினார். 1945 முதல் 1967 வரை இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பிலிருந்தார்.
தலைமை விருந்தினர்கள்:
- பாக்கிஸ்தான் தலைமை விருந்தினர் – 1955ல் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் முஹம்மது தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 1965ல் ராணா அப்துல் ஹமீத், பாகிஸ்தான் அரசின் அமைச்சர்.
- தென்னாபிரிக்கா தலைமை விருந்தினர் – 1991ல் மியான்மரின் ஆங் சான் சூ கி மற்றும் 1995ல் நெல்சன் மண்டேலா.
- அமெரிக்கா தலைமை விருந்தினர் – 2015ல் பராக் ஒபாமா.
- எகிப்திய தலைமை விருந்தினர் – 2023ல் அப்தெல் ஃபத்தா அல் சிசி.
- பிரெஞ்சு தலைமை விருந்தினர் – 2024ல் இம்மானுவேல் மக்ரோன்.
இந்த ஆண்டு 2025ல் யார் தலைமை விருந்தினர்:
இந்தோனேஷியா தலைமை விருந்தினர் – பிரபோவோ சுபியாண்டோகுடியரசு தினம் கொடி ஏற்றும் முறை..! | National Flag Hoisting Rules in Tamil
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |