வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியாவின் பெரிய உப்பு நீர் ஏரி எது தெரியுமா.?

Updated On: May 23, 2025 1:13 PM
Follow Us:
indhiyavin periya uppu neer eri tamil
---Advertisement---
Advertisement

Indhiyavin Periya Uppu Neer Eri Tamil

பொதுவாக நாம் பள்ளி பருவத்தில் படிக்கும் போது நிறைய பொது அறிவு சார்ந்த கேள்விகளை படித்திருப்போம். அதன் பிறகு நாம் அரசு தேர்வுக்கு தயார் ஆகி கொண்டிருந்தோம் என்றால் பொது அறிவு மற்றும் தமிழ் பாடத்திலிருந்து உள்ள கேள்விகளை தேடி படிப்போம். ஒரு காலத்தில் அரசு தேர்வுகளுக்கு தயார் ஆகிறவர்கள் புத்தகத்தை தேடி தேடி படித்தார்கள். அதுவும் அணியாக அமர்ந்து படித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் புத்தகத்தை வைத்து படிப்பதில்லை. ஏனென்றால் கையிலே உலகம் உள்ளது. எதை சொல்கிறேன் என்று புரிந்திருக்கும். மொபைலை தான் சொல்கிறேன். நமக்கு என்ன தெரியவில்லை என்றாலும் மொபைலை போட்டு தெரிந்து கொள்கிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏறி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

இந்தியாவின் பெரிய உப்பு நீர் ஏரி எது?

இந்தியாவின் பெரிய உப்பு நீர் ஏரி எது

 இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி என்பது சாம்பார் ஏரி ஆகும்.  இவை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர் மற்றும் நாகௌர் போன்ற மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ளது. இவை 200 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டுள்ளது. இந்த ஏரியானது நீள்வட்ட அமைப்பை கொண்டுள்ளது.

5 கிலோ மீற்றர் நீளம் 3 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கிறது. இந்த ஏரியானது ஆரவள்ளி மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. மெந்தா மற்றும் ரன்பங்கர் போன்ற நிலையற்ற நீரோடைகளாலும், பல்வேறு சிறிய நீரோடைகளாலும் இந்த ஏரியின் நீர் அமைந்திருக்கிறது.

இந்த ஏரியானது 1990-ம் ஆண்டுகளில் புலம் பெயர்ந்த பறவைகளுக்கு குளிர்கால இடமாக இருந்தது. இந்த ஏரியானது ஃபிளமிங்கோக்கள், பெலிகன்கள், ஷெல்டக் மற்றும் சாண்ட்பைப்பர்கள் போன்ற இனங்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்த உப்பு உற்பத்தியில் ஆண்டுதோறும் தோராயமாக 2, 10,000 டன் உற்பத்தி செய்கிறது. உப்பு உற்பத்தியில் முன்னணியில் ராஜஸ்தான் விளங்குகிறது.

மேலும் இவர் சுற்றுசூழல் ஆரோக்கியத்தையும். பாதுகாப்பையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பல்வேறு வகையான உயிரினங்களுக்கு வாழ்வாயும், வாழும் இடத்தையும் வழங்குகிறது. இந்த ஏரியில் சூரியன் மறைவது அழகாக இருக்கும்.சூரியன் மறையும் பொழுது, ஆரஞ்சு இளஞ்சிவப்பு, ஊதா போன்ற நிறங்களில் காட்சியளிக்கிறது.

இந்த ஏரியை பார்ப்பதற்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால நிலை ஏற்றதாக இருக்கும். இந்த காலம் குளிர்காலம் என்பதால் அதனை பார்வையிடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now