இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு
இன்றைய பதிவில் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பற்றி பார்க்க போகிறோம். இந்த பதிவானது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு மட்டுமல்லாமல் பள்ளி படிக்கும் இளம் வயது மாணவர்களுக்கும் பொது அறிவு சார்ந்த இந்த பதிவு பயன்படக்கூடிய பதிவுவாகும்.இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு தான் இந்தியாவின் மூன்றாவது பணக்கார நகரமாகும். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பற்றி பார்க்கலாம் வாங்க…
பெங்களூரு சிறப்புகள்:

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய மையமாக திகழ்கிறது. உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் $150.1 பில்லியன் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் 12,600 மில்லினர்களுடன் 60- வது இடத்தில் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய மையமாக இருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டது. நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் 35 சதவீததிற்கும் முக்கிய பங்களிக்கிறது. அமெரிக்காவின் அசல் சிலிகான் பள்ளத்தாக்கை போலவே புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய இடமாக திகழ்கிறது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தயக்கமாக உள்ளது.
- சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்
- பல்வேறு தொழில் மண்டலங்கள்
- தடையில்லா மின்சாரம்
- மேம்பட்ட உள்கட்டமைப்பு
- திறமையான பணியாளர்கள்
- உலகளாவிய நிறுவன அமைப்பு
- தொடக்க சூழல் அமைப்பு
- கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்
- வரி சலுகைகள்
- அரசாங்க ஆதரவு
மஞ்சள் நிற நதி எந்த நாட்டில் ஓடுகிறது தெரியுமா?
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














