இந்தியாவின் உயர்ந்த விருதுகள் பற்றிய தகவல்கள் | Indiavin irandavathu uyariya viruthu:-
சிறந்த சாதனையாளர்களுக்கு உலகில் பலவகையான விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு சில நேரங்களில் அவற்றுடன் வெகுமதிகளும் வழங்கபடுகிறது. விளையாட்டு முதல் அரசியல் வரை அறிவியல், எழுத்து வரை பல துறைகளில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் வெவ்வேறு வடிவங்களை எடுத்தாலும், இந்த பரிசுகள் அனைத்தும் அவர்களின் விளையாட்டின் உச்சியில் ஏறிய நபர்களை முன்னிலைப்படுத்தவும் கொண்டாடும் நோக்கமாகும். அதன் வகையில் இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் படித்து தெறித்து கொள்வோம் வாங்க..
இந்தியாவின் பொது சேவைக்கான உயரிய விருது எது?
விடை: பாரத ரத்னா
உயரிய விருதான பாரத ரத்னா விருது 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கலை, இலக்கியம், சமூக சேவையில் சாதனை படைத்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது இது அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு என மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது எது?
விடை: பத்ம விபூஷன்
இந்த விருது இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது ஆகும். இவ்விருது 1954-ல் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம் |
இந்தியாவின் மூன்றாவது உயரிய விருது எது?
விடை: பத்ம பூஷன்
இது இந்தியாவின் மூன்றாவது உயரிய விருது ஆகும். இவ்விருது 1954-ல் உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் நான்காவது உயரிய விருது எது?
விடை: பத்ம ஸ்ரீ
பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் ஆகிய விருதுகளுக்கு அடுத்து இந்தியாவின் நான்காவது உயரிய விருதாக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இது 1954-ல் உருவாக்கப்பட்டது.
பத்திரிகை துறையின் உயரிய விருது எது? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |