வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இரட்டை காப்பியங்கள் யாவை | Irattai Kappiyangal

Updated On: July 22, 2025 6:47 PM
Follow Us:
Irattai Kappiyangal
---Advertisement---
Advertisement

இரட்டை காப்பியங்கள் என்றால் என்ன?

ஹாய் பிரண்ட்ஸ் இன்றைய பதிவில் இரட்டை காப்பியங்கள் என்று எதை அழைக்கப்படுகிறது. இதற்கு ஏன் இரட்டை காப்பியம் என்று பெயர் சூட்டப்பட்டது என இரட்டை காப்பியங்கள் பற்றிய பொது அறிவு சார்ந்த வினா விடைகளை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இரட்டை காப்பியங்கள் யாவை?

தமிழ்மொழியில் பெரும் காப்பியங்கள், சிறு காப்பியங்கள் என இரு பிரிவுகள் காணப்படுகின்றது.

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Irattai Kappiyangal Notes in Tamil

பெயர் சூட்டப்பட்ட காரணம்:

சிலப்பதிகாரமும், மணிமேலையும் ஒரே குடும்ப வரலாற்றை கூறுவதானால் இதற்கு இரட்டை காப்பியங்கள் என்று பெயர் சூட்டப்பட்டது.

தமிழில் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தையும் ஐம்பெரும் காப்பியம் என்று அழைப்பார்கள். ஆகவே சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரண்டும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று.

இரட்டை காப்பியங்கள் – Irattai Kappiyangal in Tamil:

கண்ணகி, கோவலன், மாதவி ஆகியோரின் வாழ்க்கையை பற்றி கூறுவது சிலப்பதிகாரம் ஆகும்.

கோவலன், மாதவி ஆகியோருக்கு பிறந்த மணிமேகலையின் வாழ்க்கையை பற்றி கூறுவது மணிமேகலை காப்பியம் ஆகும்.

சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். இவர் ஒரு சாதனை துறவி. இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆவர். மேலும் இவர் பல கலைகளை அறிந்தவர்.

கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.

இந்த சிலப்பதிகாரம் காப்பியத்தில் புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. மேலும் “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் புகழ்கிறார்

மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்தது மணிமேகலை. சங்கமருவிய காலத்தில் பௌத்த சமயம் தமிழகத்தில் பிரசித்தி பெற்று பேசப்பட்டது. புத்தருடைய வரலாறு புலவர் சாத்தனாருடைய உள்ளத்தை பெரிதும் கவர்ந்தது. அதன் வெளிப்பாடாகவே மணிமேகலை தோற்றம் பெற்றது. இவை கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலை பற்றிய வரலாற்றை கூறுவதாக இருக்கிறது.

இது தொடர்புடைய பதிவுகள் 
ஆறாம் வகுப்பு சிலப்பதிகாரம் வினா விடை
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம்
சிலப்பதிகாரம் சிறப்புகள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now