வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?

Updated On: October 30, 2025 3:18 PM
Follow Us:
Loksapavirku Sellatha Muthal Pirathamar
---Advertisement---
Advertisement

Loksapavirku Sellatha Muthal Pirathamar

வணக்கம் நண்பர்களே.. நமது பொதுநலம்.காம் பதிவில் சுவாரசியமாக பலவகையான பொது அறிவு சார்ந்த விஷயங்களை பதிவு செய்து வருகின்றோம். அதுபோல நம்மில் பலருக்கும் தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்..

லோக்சபா பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் பல உள்ளது. அவற்றில் முக்கியமானது லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் பெயர் பற்றி தான். இந்த கேள்வி பல போட்டி தேர்வுகளில் கேட்டு பார்த்து இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் இக்கேள்விக்கான பதில் பற்றி தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் பெயர்?

சரண் சிங் வாழ்க்கை வரலாறு

விடை: திரு. சரண்சிங்.

சரண் சிங் வரலாறு:

திரு. சரண் சிங் 1902-ல் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார். 1923-ல் அவர் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். 1925-ல் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்ற அவர் காசியபாத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார்.1929 மீரட் சென்ற அவர் காங்கிரஸ்சில் இணைந்தார்.

இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார். குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார். இவர் தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை.

திரு. சரண்சிங் பொது பணிக்காகத் தன்னை முழுதும் அற்பணித்தவர், சமூக நீதியைப் பெரிதும் நம்புபவர். லட்சக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியவர்.

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த திரு. சரண் சிங் தனது ஓய்வு நேரத்தை படிப்பதற்காகவும், எழுதுவதற்காகவும் செலவிட்டார். “ஜமீன்தாரி முறை ஒழிப்பு”, “கூட்டுறவு பண்ணை முறை”, “இந்தியாவில் வருமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்”, “வேலை செய்பவர்களுக்கு நிலம்”, “ஆஃப் ஹோல்டிங்க் பிலோ ஏ செர்டெய்ன் மினிமம்” உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் மற்றும் துண்டுப் பிரச்சுரங்களை அவர் எழுதியுள்ளார்.

லோக்சபாவில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை விவரம்.! | Number of Seats in Lok Sabha State Wise in Tamil

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now