பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்.! | Pathinenkilkanakku Noolgal in Tamil

Advertisement

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை | Pathinenkilkanakku Noolgal

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். தமிழ் பாடங்களில் நாம் தெரிந்துகொள்ள விஷயங்களில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஒன்று. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள் பற்றி கேட்கப்படாதா தேர்வுகளே கிடையாது. ஆகையால், நம் அனைவருமே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான மற்றும் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை ஆகும். இந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இது பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும், TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களும் மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட பகுதிகளை படித்து பயன்பெறுங்கள்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது
  4. இனியவை நாற்பது
  5. கார் நாற்பது
  6. களவழி நாற்பது
  7. ஐந்திணை ஐம்பது
  8. ஐந்திணை எழுபது
  9. திணைமொழி ஐம்பது
  10. திணைமாலை நூற்றைம்பது
  11. திருக்குறள்
  12. திரிகடுகம்
  13. ஆசாரக்கோவை
  14. பழமொழி
  15. சிறுபஞ்சமூலம்
  16. முதுமொழிக்காஞ்சி
  17. ஏலாதி
  18. கைநிலை

இவற்றில் நீதி நூல்கள், அகத்திணை நூல்கள், புறத்திணை நூல்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. சரி இவற்றில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆசிரியர்கள் யார்? நீதி நூல்கள், அக நூல்கள், புறநூல்கள் என்று எத்தனை பிரித்துள்ளனர் என்பதை பற்றி கீழ் அட்டணவனையில் பார்க்கலாம் வாங்க.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்: 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெயர் பாடல் எண்ணிக்கை வகை ஆசிரியர்
நாலடியார் 400 அறம்/நீதி நூல்கள் சமண முனிவர்கள்
நான்மணிக்கடிகை 101 விளம்பி நாகனார்
இன்னா நாற்பது 40+1 கபிலர்
இனியவை நாற்பது 40+1 பூதஞ்சேந்தனார்
திருக்குறள் 1330 திருவள்ளுவர்
திரிகடுகம் 100 நல்லாதனார்
ஏலாதி 80 கணிமேதாவியார்
பழமொழி நானூறு 400 முன்றுரை அரையனார்
ஆசாரக்கோவை 100+1 பெருவாயின் முள்ளியார்
சிறுபஞ்சமூலம் 104 காரியாசான்
முதுமொழிக்காஞ்சி 10*10 கூடலூர்க்கிழார்
ஐந்திணை ஐம்பது 50 அக நூல்கள் பொறையனார்
ஐந்திணை எழுபது 70 மூவாதியார்
திணைமொழி ஐம்பது 50 கண்ணன் சேந்தனார்
திணைமாலை நூற்றைம்பது 150 கணிமேதையார்
கைந்நிலை 60 புல்லங்காடனார்
கார்நாற்பது 40 கண்ணங் கூத்தனார்
களவழி நாற்பது 40+1 புறநூல்கள் பொய்கையார்

நீதி நூல்கள்:

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது
  4. இனியவை நாற்பது
  5. திருக்குறள்
  6. திரிகடுகம்
  7. ஏலாதி
  8. பழமொழி நானூறு
  9. ஆசாரக்கோவை
  10. சிறுபஞ்சமூலம்
  11. முதுமொழிக்காஞ்சி

அகத்திணை நூல்கள்:

  1. ஐந்திணை ஐம்பது
  2. திணைமொழி ஐம்பது
  3. ஐந்திணை எழுபது
  4. திணைமாலை நூற்றைம்பது
  5. கார் நாற்பது
  6. கைந்நிலை

புறத்திணை நூல்:

  1. களவழி நாற்பது
பதினெண் மேற்கணக்கு நூல்கள்
ஔவையார் எழுதிய நூல்கள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement