பத்திரிகை துறையின் மிக உயரிய விருது என்ன தெரியுமா?
Pathirikai Thurain Uyariya Viruthu – அரசுக்கும், மக்களுக்கும் இணைப்பு சங்கிலியாக செயல்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பத்திரிகை துறைதான். பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் அரும்பணியாற்றுபவர்களுக்கு பலவகையான விருதுகள் ஆண்டுதோறும் வழங்கபடுகிறது. அந்த வகையில் பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயமான பத்திரிகை துறையின் உயரிய விருதாக கருதப்படுவது எது?, எதற்க்காக எந்த விருது வழங்கப்படுகிறது?, எங்கு அந்த விருது வழங்கபடுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
பத்திரிகை துறையின் உயரிய விருது பெயர் என்ன?
புலிட்சர் விருது பத்திரிகை துறையின் உயரிய விருதாக அழைக்கப்படுகிறது. இந்த புலிட்சர் விருது என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.இது இத்துறைகளுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படுகின்றது.
புலிட்சர் விருது எங்கு வழங்கப்படுகிறது?
இந்த புலிட்சர் பரிசு நியூயார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இத்துறைகளைச் சேர்ந்த 21 பிரிவுகளில் ஆண்டுதோறும் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் 20 பிரிவுகளுக்கான பரிசாக ஒவ்வொன்றும் 10,000 அமெரிக்க டாலர்களும், சான்றிதழும் வழங்கப்படுகின்றது.
எதற்க்காக வழங்கப்படுகிறது?
ஊடகவியல் துறை சார்ந்த பொதுச் சேவைப் பிரிவில், பரிசாக ஒரு தங்கப் பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பரிசு, ஒரு செய்தி இதழ்களுக்கே வழங்கப்படுவதாயினும், ஒரு தனி மனிதருடைய பெயரும் பரிந்துரைக்கப்படலாம்.
இது, ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் என்பவரால் நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது இதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார். இத் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (School of Journalism) தொடங்கியது. முதலாவது புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டு சூன் மாதம் நான்காம் நாள் வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |