Pinnaladai Nagaram in Tamil
மனிதனாக பிறந்த நாம் அனைவருக்கும் ஐந்து அறிவு இருக்கிறது. அதாவது பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல் மற்றும் ருசித்தல் என ஐந்து அறிவு இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இவை அனைத்தினையும் நாம் அன்றாடம் செய்து கொண்டு தான் உள்ளோம். ஆனால் இவை இல்லாமல் நமது அறிவினை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதலில் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி தெரிந்து இருப்பது அவசியம். இத்தகைய விஷயத்தை நாம் அவ்வளவாக விரும்பி செய்வது இல்லை. இவ்வாறு பார்த்தால் நமக்கு சாதாரணமாக தெரியாத எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. எனவே இன்று பொதுஅறிவு வினாக்களில் ஒன்றாக பின்னலாடை நகரம் என்றும் அழைக்கப்படுவது எது..? என்ற கேள்விக்கான பதிலை பார்க்கலாம் வாங்க..!
உலகில் மழை பெய்யாத கிராமம் பற்றி உங்களுக்கு தெரியுமா
பின்னலாடை என்றால் என்ன?
நூல் சுழல்களை பின்னிப்பிணைத்து உருவாக்கப்படும் துணியை பின்னலாடை என்கிறோம். இது, கையால் அல்லது இயந்திரத்தின் மூலம் செய்யப்படலாம். பின்னலாடை துணி, உயர் ஃபேஷன் மற்றும் அன்றாட ஆடைகளுக்கு பயன்படுகிறது.
பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படுவது எது.?

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் உடுத்துவதற்கு உடை என்பது மிகவும் முக்கியம். இத்தகைய ஆடைகளை நமக்கு பிடித்தவாறு கடைகளில் சென்று வாங்கிக் கொள்கிறோம்.
ஆனால் ஆரம்பகாலத்தில் ஆடை என்பது நெய்து செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. அதனால் பிறகு தொழிநுட்ப வளர்ச்சியால் மிஷினை கொண்டு ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிநுட்ப வளர்ச்சியால் இவ்வாறு மாறினால் கூட பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு சிட்டி இருக்கிறது.
எனவே பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படுவது எது என்றால்..? திருப்பூர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் திருப்பூரூம் ஒன்றாக இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள ஏழாவது பெரிய வளர்ச்சி அடையும் மாவட்டமாகவும் இது இருக்கிறது. இந்த மாவட்டத்தில் ஆடைகளை தயாரிக்கும் உற்பத்தி மட்டும் அதிக அளவில் வளர்ச்சி அடைகிறது.
இது பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படுவது மட்டும் இல்லாமல் டாலர் சிட்டி என்ற மற்றொரு பெயரினால் அழைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் ஆடைகளின் உற்பத்தி நாளுக்கு நாள் இங்கு வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. மேலும் ஆடைகளை உற்பத்தி செய்வதில் மூலம் இங்கு பலவகையான மக்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகமாகி இருக்கிறது.
திருப்பூர் சிறப்புகள்:
- இந்தியாவின் முக்கியமான நெய்தல் தொழிலை மையமாக கொண்டுள்ள ஊர் திருப்பூர் ஆகும்.
- உலகளாவிய அளவில் உயர்தர துணிகள், உடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- 1000க்கும் மேற்பட்ட துணி தொழில்கள் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
- இந்தியாவின் 40% க்கு மேற்பட்ட துணி ஏற்றுமதி திருப்பூரிலிருந்து நிகழ்கிறது.
- இலக்கற்றோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாக உள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














