வல்லினம் மிகும் இடங்கள் | Vallinam Migum Idangal in Tamil
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் நிலைமொழி இறுதியில் வல்லின எழுத்து சேர்வதை குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வரும் மொழி க, ச, த, ப வரும் எழுத்துகளில் தொடர் சொல்லாக அமையும் பொழுது அந்த எழுத்துக்கள் சில இடங்களில் மிகுந்தும் சில இடங்களில் மிகாமலும் வரும். சிலர் பேசும்போது அழகாக பேசுவதுபோல் தான் இருக்கும். ஆனால் எழுதும்போது அங்கங்கே பிழைகள் இருக்கும். இதற்கான காரணம் என்ன தெரியுமா.? இரண்டு சொற்கள் சேரும்போது எந்தெந்த இடங்களில் எல்லாம் வல்லினம் மிகும் எந்தெந்த இடங்களில் வல்லினம் மிகாது என்பதைப் பற்றிய போதிய பயிற்சி இல்லாததுதான். எனவே வல்லினம் மிகும் இடங்களை வினா விடையுடன் பார்க்கலாம் வாங்க ….
- நிலைமொழி மற்றும் நிலைமொழியின் ஈற்றெழுத்து
- வரும் மொழியின் முதலெழுத்து (க, ச, த, ப) ஆக இருக்க வேண்டும்.
- (க் , ச், ட் , த், ப் , ற் ) என்ற 6 எழுத்துக்கள் வல்லின எழுத்துக்களில் க, ச, த, ப, என்ற 4 எழுத்துக்களும் வருமொழியில் முதலாவதாக வந்தால் மட்டுமே அவ்விடத்தில் ஒற்று மிகும் என்பது விதி. அதனால் தான் இதை வல்லினம் மிகும் எழுத்துக்கள் என்கின்றோம். அந்த 4 எழுத்துக்களில் ஒற்று க், ச், த், ப் வரும்.
யாப்பிலக்கணம் என்றால் என்ன |
எடுத்துக்காட்டு:
- இராமனை + கண்டேன் = இராமனைக் கண்டேன் (க் – என ஒற்று மிகுந்தது)
- இங்கு இராமனை என்பது நிலைமொழி (நிலையாக நிற்கும் சொல்).
- கண்டேன் என்பது வரும்மொழி (நிலைமொழியோடு சேர வரும் சொல்)
- இராமன் +ஐ என்பது நிலைமொழி ஈற்றெழுத்து இரண்டாம் வேற்றுமை உருபு ன் +ஐ = னை என்று வருகிறது. வரும் மொழியின் முதலில் “க” என்று வல்லினம் வருவதால் இவ்விடத்தில் “க்” என்று ஒற்று வரும்.
கீழ்க்கண்ட அனைத்து விதிகளும் நிலைமொழிக்கு மட்டுமே பொருந்தும்.
வல்லினம் மிகும் இடங்கள் வினா விடை:
- தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
பலா + சுளை = பலாச்சுளை
இரா + பகல் = இராப்பகல்
கனா + காலம் = கனாக்காலம்
2. நெடில் தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்
நாடு + பற்று = நாட்டுப் பற்று
வயிறு + போக்கு = வயிற்றுப்போக்கு
முரடு + காளை = முரட்டுக்காளை
காடு + தேன் = காட்டுத்தேன்
3. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.
அடுப்பு + புகை = அடுப்புப்புகை
விழி + புனல் = விழிப்புனல்
4. அ, இ, உ, என்னும் சுட்டெழுத்துக்களின் பின்னும் எ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.
அ + குடம் = அக்குடம்
இ + புத்தகம் = இப்புத்தகம்
உ + சிறுவன் = உச்சிறுவன்
எ + தொழில் = எத்தொழில்
5. பண்பு தொகையில் வல்லினம் மிகும்
சதுரம் + பலகை = சதுரப்பலகை
வட்டம் + பாறை = வட்டப்பாறை
பச்சை +தட்டு = பச்சைத்தட்டு
6. அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
அப்படி + கூறினான் = அப்படிக்கூறினான்
இப்படி+ சொன்னான் = இப்படிச்சொன்னான்
எப்படி+ தந்தான் = எப்படித்தந்தான்
7. என, ஆக என்னும் சொற்களுக்கு பின் வல்லினம் மிகும்
என + கூறினான் = எனக்கூறினான்
ஆக + சொன்னான் = ஆகச்சொன்னான்
8. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்
தாமரை + பூ = தாமரைப்பூ
குதிரை + கால் = குதிரைக்கால்
9. அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
அந்த + கிணறு = அந்தக்கிணறு
இந்த + தோட்டம் = இந்தத்தோட்டம்
எந்த + செயல் = எந்தச்செயல்
10. இரண்டம் வேற்றுமை உருப்பிற்க்குப் பின் வல்லினம் மிகும்.
கடையை + கண்டேன் = கடையைக்கண்டேன்
பொருளை + தேடு = பொருளைத்தேடு
நூலை + படி = நூலைப்படி
11. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
தச்சு + தொழில் = தச்சுத்தொழில்
கேட்டு + சொல் = கேட்டுச்சொல்
எட்டு + தொகை = எட்டுத்தொகை
12. மென்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.
மருந்து + கடை = மருந்துக்கடை
பண்பு + தொகை = பண்புத்தொகை
கன்று + குட்டி = கன்றுக்குட்டி
13. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
குடி+ பிறந்தார் = குடிப்பிறந்தார்
வழி + சென்றார் = வழிச்சென்றார்
14. நான்காம் வேற்றுமை உருப்பிற்க்குப்பின் வல்லினம் மிகும்
பள்ளிக்கு + சென்றான் = பள்ளிக்குச்சென்றான்
கடைக்கு + போனான் = கடைக்குப்போனான்
15. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
மல்லி + பூ = மல்லிப்பூ
16. அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
தேட + சொன்னான் = தேடச்சொன்னான்
என + கூறு = எனக்கூறு
பாட + தெரியுமா = பாடத்தெரியுமா
17. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க, வரும்மொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும். (உயிரீற்றுச் சொற்களிலன் பின் வல்லினம் மிகும்)
நிலா + சோறு = நிலாச்சோறு
மழை + காலம் = மழைக்காலம்
பனி + துளி = பனித்துளி
18. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.
பூ+ பறித்தான் = பூப்பறித்தான்
கை +காசு = கைக்காசு
19. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்
நன்றாய் + பேசினார் = நன்றாய்ப்பேசினார்
போய் + தேடு = போய்த்தெடு
20. இனி, தனி, என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
இனி + காணாலாம் = இனிக்காணலாம்
தனி + தமிழ் = தனித்தமிழ்
21. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
சால + சிறந்தது = சாலச்சிறந்தது
தவ + பெரிது = தவப்பெரிது
22. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.
உண்ணா + சோறு = உண்ணாச்சோறு
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை
அழியா + புகழ் = அழியாப்புகழ்
23. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம்மிகும்.
தண்ணீர்+ குடம் = தண்ணீர்க்குடம்
மலர் + கூடை = மலர்க்கூடை
24. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.
சட்டை + துணி = சட்டைத்துணி
குடை + கம்பி = குடைக்கம்பி
25. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்
பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்
மலர் + கண் = மலர்க்கண்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |