Which Country Awards The Nobel Prize
பொதுவாக நாம் பள்ளி படிக்கும் காலத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையே ஆனது போட்டியானது இருக்கும். ஆசிரியர்கள் அத்தகைய போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட பரிசினை வழங்குவார்கள். இதுமாதிரி வைக்கும் போட்டியிலும் நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்து இருக்கும். இத்தகைய போட்டி ஆனது நம்முடைய வயது மற்றும் படிப்பிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே போகும். அவ்வாறு நம்முடைய பள்ளிப்படிக்கும் காலம் முதல் கல்லூரி படிக்கும் வரை நிறைய போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசு பொருட்களை பெற்று இருப்போம். அவ்வாறு நாம் பெரும் பரிசு பொருட்களில் விலை மதிக்க முடியாத ஒன்றும் உள்ளது. அதாவது நோபல் பரிசு தான். இப்படிப்பட்ட நோபல் பரிசினை வழங்கும் நாடு எது என்று தான் இன்று நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம். உங்களுக்கு தெரியவில்லை என்றால் பதிவை தொடர்ந்து படித்து பாருங்கள் பதில் கிடைத்து விடும்.
உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா |
நோபல் பரிசு வழங்கும் நாடு எது..?
யார் ஒருவர் சமூகத்திற்கு பயன்பெறும் வகையில் ஆய்வின் மூலம் தொழிநுட்பங்கள் அல்லது புதிய கருவிகளை கண்டுபிடிப்பது, அயராது சமூகத்திற்காக தொண்டாற்றுவது இதுபோன்ற செயல்களை புரிந்து உள்ளார்களா அவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தான் நோபல் பரிசு எனப்படும். இந்த நோபல் பரிசு ஆனது நோபெல் பரிசு என்றும் அழைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நோபல் பரிசினை அனைத்து நாடுகளும் வழங்குவது இல்லை. ஒரே ஒரு நாடு தான் வழங்குகிறது. ஆகவே நோபல் பரிசினை வழங்கும் நாடு எதுவென்றால்..?
அது ஸ்வீடன் நாடு ஆகும். இந்த நோபல் பரிசை நடைமுறைக்கு கொண்டு வந்தவர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவர் ஆவர். அதுபோல அமைதிக்கான நோபல் பரிசினை நார்வே வழங்குகிறது.
மேலும் இந்த நோபல் பரிசு ஆனது 1901 ஆம் ஆண்டு முதல் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சமூகத்திற்காக தொண்டாற்றியருக்கு நோபல் பரிசு வழங்கபடுகிறது.
இந்தியாவில் நோபல் பரிசு பெற்றவர்கள்:
- அன்னை தெரசா
- ரவீந்திரநாத் தாகூர்
- சர்.சி.வி. ராமன்
- வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
- சுப்ரமணியன் சந்திரசேகர்
- கைலாஷ் சத்யார்த்தி
மக்களின் மகிழ்ச்சியை அளவிடும் நாடு எது |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |