வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அவுரி பொடி நன்மைகள் மற்றும் தீமைகள்..!

Updated On: October 25, 2025 1:12 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

அவுரி பொடி நன்மைகள் மற்றும் தீமைகள் – Avuri Powder Uses and Side Effects in Tamil

அவுரி அல்லது நீலி என்னும் செடி தாவரவியலில் இண்டிகோஃவெரா டின்க்டோரியா (Indigofera tinctoria) என்று அழைக்கப்படுகின்றது. இது பேபேசியே (Fabaceae) என்னும் குடும்பத்தில் இண்டிகோஃவெரா (Indigofera) என்னும் இனத்தைச் சேர்ந்த செடி. இதன் பொது ஆங்கிலப் பெயர் ட்ரூ இண்டிகோ (true indigo). இச்செடியில் இருந்து முன்னர் நீல நிறம் கொண்ட சாயம் எடுத்தனர். இச்செடி எங்கிருந்து தோன்றியது என்று உறுதியாகக் கூறமுடியல்லை என்றாலும், இது வெப்பமண்டலப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. பல ஆண்டுகளாக உலகெங்கிலும் ஊதா நிறச் சாயத்திற்கு இச்செடியைப் பயன்படுத்தினர்.ஆனால் இன்று செயற்கையாக வேதிப்பொருட்கள் வழி நீல நிறச் சாயம் பெற்றாலும், இன்றும் இதன்வழி பெறும் நிறம்தரும் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த அவுரி செடி பல நன்மைகளை தருகிறது.

மேலும் தலை முடி நிறம் கருமையாக மாறுவதற்கு இந்த அவுரி பொடி பயன்படுகிறது. பொதுவாக சிறியவர்கள்  முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கக்கூடிய முடி பிரச்சனை என்றால் அது நரை முடி தான். முந்தைய காலத்தில் வயதானவர்களுக்கு தான் நரை முடி பிரச்சனை வரும். ஆனால் இப்போது எல்லாம் அப்படி கிடையாது. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் நரை முடி வருகிறது. அதனால் இனிமேல் எனக்கு நரை முடி பிரச்சனை இருக்கிறது என்ன செய்வது என்று புலம்பவும் வேண்டாம் மற்றவர்களிடம் அதற்கான தீர்வையும் கேட்க வேண்டாம். உங்களுடைய நரை முடி நிரந்தரமாக கருப்பாக மாற இந்த ஒரு பொருள் போதும். சரி இந்த அவுரி பொடி எதற்கெல்லாம் பயன்படுகிறது மற்றும் இதன் தீமைகள் என்ன என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடுக்காய் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

அவுரி பொடி நன்மைகள் | Avuri Powder Uses in Tamil | அவுரி இலை பயன்கள்:

இந்த அவுரி பொடி சருமம் பளபளப்பாவத்திற்கும், முடி முத்துணர்ச்சி பெறுவதற்கும், பற்கள் மற்றும் ஈறுகள் பிரச்சனையை சரி செய்வதற்கும், புண்கள் குணமாவதற்கும், கல்லிரல் குணமாவதற்கும், சிறுநீரக பிரச்சனையை சரி செய்வதற்கும், வாய் புண்களை ஆற்றுவதற்கு, காதில் உள்ள பூச்சிகளை வெளியேற்றுவதற்கும்பயன்படுகிறது.

மேலும் நரைமுடி என்பது நாம் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு அவுரி பொடி பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த அவுரி பொடி என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை:

இந்த பொடியை உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொண்டு தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக  எடுத்து கொள்ளா வேண்டும். இதனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து தலையில் எந்த ஷாம்புவையும் பயன்படுத்தாமல் அப்படியே தேய்த்து தலையை தண்ணீரை ஊற்றி அலசி விட வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை என்று தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரைமுடி கருமையாக மாறிவிடும்.

அவுரி பொடி தீமைகள் – Avuri Powder Side Effects in Tamil:

இந்த அவுரி பொடி அல்லது இலையை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் போது சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதனை அதிக அளவில் உட்கொள்ளும் போது சிலருக்கு வாந்தி, பேதி போன்ற ஜீரண தொடர்பான பக்க விளைவுகள் ஏற்படுத்தலாம்.

பொதுவாக அதிக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கும், வறண்ட மற்றும் மெல்லிய உச்சந் தலையை உள்ளவர்களுக்கும் அவுரி பொடி எரிச்சல், அரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மேலும் இது ஆடைகளிலும் கறையை உண்டாக்கும். எனவே, ஷாம்பு அல்லது கண்டிஷனர் போன்ற சாயமிடுதல் செயல்பாட்டின் போது தலைமுடி தவிர வேறு எங்கும் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now