Kandankathiri Benefits in Tamil
கத்தரிக்காய் வகையில் ஒன்றான கண்டங்கத்திரி செடி வகையை சேர்ந்தது ஆகும். கண்டங்கத்திரியின் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை மற்றும் வேர் என அணைத்து பகுதியும் மருத்துவ குணம் மிக்கது. இச்செடி குப்பை மேடு, கரிசல் மண், செம்மண் மற்றும் வண்டல் மண் போன்ற இடங்களில் அதிகமாக வளரக்கூடியது. இந்த செடி முழுவதும் சிறிய முட்கள் இருக்கும். இதன் பூ ஆனது நீல நிறத்திலும், காய் சிறிய வடிவத்திலும் இருக்கும். இதன் உருவம் சிறியதாக இருந்தாலும் இதிலுள்ள சத்துக்கள் நம் உடலுக்கு பெரிதும் பயன்படுகிறது. எனவே, கண்டங்கத்திரி நம் உடலுக்கு அளிக்கக்கூடிய நன்மைகள் பற்றி இப்பதிவில் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கண்டங்கத்திரி மருத்துவ பயன்கள் | Kandakathiri Maruthuva Payankal:
தலைவலி மற்றும் வாத நோய்களுக்கு மருந்து:
கண்டங்கத்திரி இலையை இடித்து அதன் சாற்றை எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கலந்து தலைவலி மற்றும் வாத நோய்களுக்கு தடவி வந்தால் எளிதில் தலைவலி மற்றும் வாத நோய்கலிருந்து விடுபடலாம்.
இரத்த அழுத்தம் சீராகும்:
கண்டங்கத்திரி பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் சமநிலையில் இருக்கும். முக்கியமாக, சளி, இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற சுவாச நோய்களை தீர்க்கும் மருந்தாக கண்டங்கத்திரி உள்ளது.
கண்டங்கத்திரி, தூதுவளை மற்றும் ஆடாதோடை இலைகளை சம அளவில் எடுத்து நன்றாக உலர்த்தி பொடியாக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் எடுத்து சிறிதளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர சுவாசம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
பல் வலி நீங்க:
கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி நெருப்பில் சுட்டு பொடியாக்கி இதனை ஆடாதோடை இலையில் வைத்து சுருட்டு போல தயார் செய்து புகைபிடித்து வர பல் வலி மற்றும் பல் கூச்சம் நீங்கும். மேலும், இந்த பொடியை கொண்டு பல் துலக்கி வருவதன் மூலம் பற்கள் தூய்மையாகவும் வலுவாகவும் இருக்கும்.
பசியின்மை நீங்க:
கண்டங்கத்திரி பழ வற்றலை பொடியாக்கி சிறிதளவு தேனில் குலைத்து பசியின்மையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நாக்கில் தடவி வர பசியின்மை நீங்கி குழந்தைகள் சாப்பிட தொடங்குவார்கள்.
ஆசனவாய் புண் நீங்க:
கண்டங்கத்திரி சாறு நிறைந்த நீரை ஆசன வாய் புண்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் ஆசனவாய் புண் எளிதில் நீங்கும்.
கண்டங்கத்தரி மலர்களை நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை ஆசன வாய் பகுதியில் அப்ளை செய்து வருவதன் மூலம் அப்பகுதியில் இருக்கும் அரிப்பு, நமைச்சல், புண் ஆகியவை குணமாகும்.
பிற நன்மைகள்:
வயிறு மற்றும் குடல்களை தொற்றுகளிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக இயக்கத்தை அளிக்கிறது.
நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி சுத்தமாக வைத்து கொள்ள உதவுகிறது.
உடலில் உள்ள உஷ்ணம் நீங்க கண்டங்கத்திரி ஒரு சிறந்த மருந்தாகும்.
கண்டங்கத்தரி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
ஒற்றை தலைவலி பிரச்சனையை நீண்ட நாட்களாக சந்திப்பவர்களுக்கு கண்டங்கத்திரி சிறந்த மருந்தாக இருக்கிறது. அதற்கு கண்டங்கத்திரியின் சாற்றை எடுத்து மூக்கின் நாசிகளில் இரண்டு சொட்டு விட வேண்டும்.
வலிப்பு நோய் பிரச்சனை இருப்பவர்கள் கண்டங்கத்திரி இலைகளை அரைத்து அதனின் சாற்றை மட்டும் எடுத்து மூக்கின் நாசிகளில் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும் போட்டு வந்தால் வலிப்பு நோயிலிருந்து விடுபடலாம்.
பல் வலி பிரச்சனையை பலரும் அடிக்கடி சந்திப்பீர்கள். அவர்கள் கண்டங்கத்திரி இலையின் சாற்றை எடுத்து காட்டனில் நனைத்து கொள்ளுங்கள். இதனை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து ஒத்தி எடுக்க வேண்டும். இதன் மூலம் பல் வலியானது சரியாகும்.
கண்டங்கத்திரி தீமைகள்:
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இந்த கண்டங்கத்திரியை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அது போல கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த கூடாது.
நீங்கள் உடல்நல குறைபாடு பிரச்சனை உள்ளவர்கள் கண்டங்கத்திரியை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பைன் நட்ஸின் நன்மைகள் பற்றி தெரியுமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |