வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நெருஞ்சில் செடியின் நன்மைகள்..! | Nerunjil Powder Benefits in Tamil

Updated On: May 19, 2026 5:33 PM
Follow Us:
Nerunjil Powder Benefits in Tamil
---Advertisement---
Advertisement

Nerunjil Powder Benefits in Tamil | நெருஞ்சில் முள் பொடி பயன்கள்

வணக்கம் நண்பர்களே. இன்றைய ஆரோக்கியம் பதிவில் நெருஞ்சில் முள் பொடியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளாலாம் வாங்க. நெருஞ்சில் செடி என்பது சாலையோரங்களிலும் வயல்வெளியில் படர்ந்து வளர்ந்து இருக்கும் மூலிகை செடி ஆகும். இச்செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் நம் உடலிற்கு தேவையான இன்றையமையாத சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளது.

நெருஞ்சில் செடி மூன்று வகைப்படும். அதாவது, சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில் (பெருநெருஞ்சில்) மற்றும் செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகளில் உள்ளது. இச்செடி முட்செடி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மேற்பகுதியில்  சிறு சிறு முற்கள் காணப்படும். இச்செடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் ஆகிய அனைத்தும் மருத்துவகுணம் மிக்கவை. இந்த இலையில் அதிக அளவு இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகையால், இவற்றின் நன்மைகள் பற்றி இப்பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மூக்குத்தி பூவில் இவ்வளவு பயன்கள் இருக்கிறதா..

நெருஞ்சில் முள் பொடி பயன்கள்:

நெருஞ்சில் முள் பொடி பயன்கள்

ஆண்மை பெருக:

நெருஞ்சி முள்ளை ஒரு குறிப்பிட்ட அளவு சேகரித்து அதனை பாலுடன் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். அதன் பிறகு, அதனை நன்கு உலர்த்தி பொடியாக தயாரித்து, பாலுடன் 1/2 ஸ்பூன் கலந்து தினமும் காலை மாலை என இருவேலையும் அருந்தி வருவதன் மூலம், ஆண்மை பெருகும். நெருஞ்சில் ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கடுப்பு, விதைப்பை வீக்கம் போன்ற  பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.

சிறுநீரக கல் கரைய:

சிறுநீரக கல் கரைய

யானை நெருஞ்சில் காயை காயவைத்து உலர்த்தி கஷாயம் போல் செய்து தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கல் நீங்கும். நெருஞ்சில் அனைத்தையும் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து எருமை தயிரில் கலந்து காலை ஒரு வேலை மட்டும் குடித்துவருவதன் மூலம் சிறுநீரகம் சம்மந்தபதப்பட்ட அனைத்து பிரச்சனைகளை நீங்கும்.

சொடக்கு தக்காளியில் கொட்டி கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்

வெள்ளைப்படுதல் நீங்க:

நெருஞ்சில் இலைகளை இடித்து பொடி செய்து காலை மாலை என இரண்டு வேலையும் பாலில் சேர்த்து, சிறிதளவு நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வர வெள்ளைப்படுதல் நீங்கும். மேலும், வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் நீங்கும்.

உடல் உஷ்ணம் குறைய:

உடல் உஷ்ணம் குறைய

நெருஞ்சில் செடி மற்றும் அருகம்புல் சிறிதளவு சேர்த்து, தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் போல் குடித்து வர உடல் உஷ்ணம் நீங்கும். மேலும், உடல் உஷ்ணத்தால் உண்டாகும் கண் எரிச்சல், கண் சூடு மற்றும் வயிற்று வலி போன்றவை குணமாகும்.

மஞ்சள் காமாலை:

மஞ்சள் காமாலை என்றாலே அனைவருக்கும் கீழாநெல்லி செடிதான் பயன்படுத்துவது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நெருஞ்சில் செடியும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். கீழாநெல்லி வேரும் நெருஞ்சில் வேரும் சமஅளவு எடுத்து பொடியாக அரைத்து மோர் அல்லது இளநீரில் சேர்த்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை பிரச்சனை குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

நெருஞ்சில் செடி இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையை கொண்டுள்ளது. நெருஞ்சில் விதை , கோதுமை, ஏலக்காய் , மல்லி விதை, சுக்கு ஆகியவற்றை சேர்த்து வறுத்து அதை பொடி செய்துக்கொள்ள வேண்டும். ஓரு டம்பளர் தண்ணீரில் இந்த பொடியை போட்டு கொதிக்கவிட்டு வடிகட்டி சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now