யானை நெருஞ்சில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா.?

Advertisement

யானை நெருஞ்சில் பயன்கள்

நம் முன்னோர்கள் அனைவரும் உடல்நல குறைபாடு ஏற்பட்டால் ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்ளாமல் வீட்டில் உள்ள மூலிகை செடிகளை தான் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ளவர்களுக்கு மூலிகை செடிகளை பெயர்களே தெரிவதில்லை. இன்றைய காலத்தில் உள்ளவர்கள் மூலிகை செடியை பயன்படுத்தாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே அதில் உள்ள நன்மைகள் தெரியாமல் இருபதால் தான். அதனால் தான் இந்த பதிவில் யானை நெருஞ்சில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

யானை நெருஞ்சில் தாவரம்: 

யானை நெருஞ்சில் இலையானது அகன்று நீண்ட வளைந்த விளிம்புகளை உடையது. தோராயமாக ஒன்றை அடி வளர கூடியது. இதன் தண்டு பகுதியானது தடிமனாகவும், எளிதில் உடைய கூடியதாகவும் இருக்கும். இத்தாவரமானது தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் கிடைக்க கூடியதாக இருக்கின்றது.

யானை நெருஞ்சில் பயன்கள்: 

இதயம்:

யானை நெருஞ்சில் பயன்கள்

யானை நெருஞ்சில் ஆண்டிஆக்சிடண்ட்டிகளால் நிறைந்து காணப்படுகிறது, இது கார்டியோ பாதுகாப்பு செயல்களுக்கு பொறுப்பானதாகும். இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவுகிறது மேலும் இதனால் இந்த மூலிகை அதிரோஸ்கிளிரோஸ் மற்றும் பிற இதய பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

குதிரைவாலி அரிசி தீமைகள்

சிறுநீரக பிரச்சனை:

சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால் அவற்றை சரி செய்வதற்கு யானை நெருஞ்சில் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரக கற்கள் மட்டுமில்லை, சிறுநீரக எரிச்சல், வலி, சிறுநீர் மஞ்சளாக வெளிப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

உடல் வீக்கம் குறைய: 

யானை நெருஞ்சில் பயன்கள்

சில பேருக்கு கை, முழங்கால், மூட்டு போன்றவற்றில் வீக்கம் காணப்படும், இதனை குறைப்பதற்கு யானை நெருஞ்சில் உதவுகிறது. இத்தாவரத்தின் இலை மற்றும் வேர் பகுதியை எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து 200 மிலி லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். இவை கொதித்து பாதியாக வரும் போது பானம் ரெடி. இதனை குடித்து வந்தால் உடல் உள்ள தேவையில்லாத நீர் இறங்கி வீக்கம் குறையும்.

புண்கள் ஆற:

ஆறாத புண்களை ஆற்றுவதற்கு நெருஞ்சில் உதவுகிறது. இதற்கு நெருஞ்சில் இலைகளை அரைத்து புண்களில் போட வேண்டும்.

வெள்ளைப்படுதல் பிரச்சனை:

யானை நெருஞ்சில் பயன்கள்

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் பிரச்சனையை சரி செய்வதற்கு உதவுகிறது. மேலும் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்வதற்கும் உதவுகிறது.

இதற்கு யானை நெருஞ்சில் விதையை வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி யானை நெருஞ்சில் விதைப் பொடியை ஒரு பாத்திரத்தில் 100 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து 50 மில்லிலிட்டர் ஆகும் வரை கொதிக்கவைத்து ஆறிய பிறகு குடிக்க வேண்டும்.

கருஞ்சீரகம் ஆயிலிலில் இவ்வளவு இருக்கா.! இத்தனை நாளா தெரியாம போச்சே..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement