இந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் நல்லது
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் சுவாரசியமான தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக பெரியவர்கள் இந்த வார்த்தைகளை சொல்லி கேட்டிருப்போம். அது என்வென்றால் ஒரு கெட்டதிலும் நல்லது இருக்கும் என்பது தான் சொல்லிருப்பார்கள். அது என்ன என்று எப்போதாவது யோசித்தது உண்டா? நம்மிடம் சில வகையான கெட்ட பழக்கம் இருக்கும் அது செய்தால் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா அப்படி செய்ததில் எப்போவது நல்லது நடந்து உள்ளதா? அப்படி என்ன தான் கெட்டது என்று கேட்பீர்கள். வாங்க தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
All These Bad Habits are Good in Tamil:
அனைவரும் தினமும் குளிப்பது ஒரு நல்ல பழக்கம் தான் ஆனால் குளிக்கும் போதே சிறுநீர் கழிப்பதால் அது கெட்ட பழக்கம் என்று சொல்வார்கள் ஆனால் குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நல்லது என்று சொல்லபடுகிறது.
அமெரிக்காவில் சவர் பாத் கம்பெனி ஒரு ஆய்வில் தெரியவந்தது 100 யில் 76 நபர்கள் குளிக்கும் போது சிறுநீர் கழிக்கிறார்களாம். அதனால் இது நல்லதா, கெட்டதா என்பது ஆய்வு செய்யும் போது இதனால் எந்த கெடுதலும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் நம் உடலில் ஏற்படும் அழுக்குகள் அதேபோல் வியர்வையை விட உடலிருந்து வெளியாகும் சிறுநீர் நல்லது தான் என்று தெரியவந்துள்ளது. அதேபோல் உங்களுக்கு உடலில் ஏதேனும் நோய் இல்லாமல் இருந்தால் நல்லது என்றும் சொல்கிறார்கள்.
அதேபோல் ஒரு சில நாடுகளில் அடிபட்ட கீறல்களுக்கு இந்த சிறுநீர் மருந்தாக மாறுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல் உங்கள் உடலில் அழகிற்கு பூசப்படும் கிரீம்களில் சிறுநீரில் இருக்கக்கூடிய யூரியா ளபயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.
அதேபோல் ஒட்டகத்துடைய யூரியாவை கொண்டு மருந்துகள் கண்டுபிடிக்கலாம் என்றும் மிகப்பெரிய ஆய்வு செய்து வருகிறார்கள்.
இரண்டாவதாக நாம் என்ன கெட்ட பழக்கம் வைத்திருக்கிறோம் என்றால் நேரத்தை வீணாக்குவது. அனைவருமே சொல்வார்கள் நேரத்தை வீணாக்காமல் படி, நேரத்தை வீணாக்காமல் வேலை செய் என்று ஆனால் உண்மை என்ன என்றால் நேரத்தை வீணாக்குவது நல்லது என்று சொல்கிறார்கள்.
ஏனென்றால் எப்போதும் அதிகப்படியான வேலைகளை செய்வதன் மூலம் நமக்கு நாமே மன அழுத்தத்தை கொடுக்கிறோம். அதனால் நாம் நேரத்தை நமக்காக செலவு செய்ய வேண்டும் அதாவது போன், வேலை, லேப்டாப் போன்றவற்றில் கவனம் இல்லாமல் சும்மாவே கொஞ்சம் நேரம் இருக்க வேண்டும். அப்போது தான் மனதில் அழுத்தம் என்பது இல்லாமல் இருக்க வேண்டும். அதனால் உடலில் அதிகப்படியான புத்துணர்ச்சி காணப்படும்.
மூன்றாவதாக மூக்கில் அழுக்கு எடுத்தால் நல்லது தான் ஆனால் அதனை கையால் எடுப்பது தவறு தானே என்று சொல்வார்கள். ஆனால் கையால் எடுப்பதால் நல்லது என்று சொல்கிறார்கள். இதனை பற்றிய ஆய்வும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அது எப்படி நல்லது என்று யோசிப்பீர்கள் நமக்கு காய்ச்சல் சளி பிடித்திருந்தால் கையால் மூக்கில் அழுக்குகளை எடுப்பது தவறு நீங்கள் சாதாரமாக இருக்கும் போது ஒரு இரண்டு முறை சுத்தம் செய்தால் நல்லது என்று சொல்கிறார்கள். இதனால் உடலில் இமுனிட்டி பவர் அதிகம் ஆகிறது என்றும் சொல்கிறார்கள்.
நமக்கு வேலைபார்க்கும் இடத்திலும் சரி வீட்டிலும் சரி அல்லது யாராவாக இருந்தாலும் அவர்களிடம் உங்களால் முடிந்த அளவுக்கு மட்டுமே Yes சொல்ல கத்துக்க வேண்டும். அனைத்து இடத்திலும் YES என்று சொல்கிறோம் என்றால் அங்கு நாம் அளவுக்கு அதிகமான விஷயத்தை மனத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் மட்டுமே கவனம் இருக்கும். அதனால் No சொல்ல வேண்டும். அப்போது தான் நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யமுடியும். அதனால் No சொல்வது சரி என்று சொல்கிறார்கள்.
நெடுஞ்சாலையில் சிவப்பு அரளி செடிகளை மட்டும் வளர்ப்பது ஏன் தெரியுமா?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |