ஏழாம் வகுப்பு எங்கள் தமிழ் வினா விடைகள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சமச்சீர் கல்வியில் ஏழாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள எங்கள் தமிழ் பாடல் மற்றும் அதில் உள்ள வினா விடைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. இந்த பதிவு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு வினா விடைகளை புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும் என நம்புகிறோம். வாங்க வினா விடைகளை பார்க்கலாம்.
எங்கள் தமிழ் பாடல் – எங்கள் தமிழ் வினா விடை:
அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்
— நாமக்கல் கவிஞர்.
எங்கள் தமிழ் வினா விடைகள் | Samacheer Kalvi 7th Tamil Book Term 1 Chapter 1.1
சொல்லும் பொருளும்:
- ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
- குறி – குறிக்கோள்
- விரதம் – நோன்பு
- பொழிகிற – தருகின்ற
சமச்சீர் கல்வி 7 தமிழ் வினா விடைகள்
எங்கள் தமிழ் வினா விடைகள்:
- நெறி எனும் சொல்லின் பொருள்
அ) வழி
ஆ) குறிக்கோள்
இ) கொள்கை
ஈ) அறம்
விடை: அ) கொள்கை
2. குரலாகும் எனும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
அ) குரல் + யாகும்
ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும்
ஈ) குர + ஆகும்
விடை: ஆ) குரல் + ஆகும்
3. வான்+ஒலி என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
அ) வான்ஒலி
ஆ) வானொலி
இ) வாவொலி
ஈ) வானலி
விடை: ஆ) வானொலி
நயம் அறிக – 7ஆம் வகுப்பு தமிழ் வினா விடை:
- எங்கள் தமிழ் பாடலில் முதல் எழுத்து ஒன்று போல் வரும் மோனை சொற்களை எடுத்து எழுதுக
- அருள்நெறி – அதுவே
- கொல்லா – கொள்கை
- எல்லா – என்றும்
- அன்பும் – அச்சம்,
- இன்புறவே – இசைந்திடும்
2. எங்கள் தமிழ் பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் எதுகை சொற்களை எடுத்து எழுதுக
- அருள் – பொருள்
- தரலாகும் – குரலாகும்
- புகழாது – இகழாது
- யாரையும் – தாரையும்
- அன்பும் – இன்பம்
3. எங்கள் தமிழ் பாடலில் இறுதி எழுத்து ஒன்று போல் வரும் இயைபு சொற்களை எடுத்து எழுதுக
- தரலாகும் – குரலாகும்
- ஊக்கிவிடும் – போக்கிவிடும்
- வானொலியாம் – தேன்மொழியாம்
- புகழாது – இகழாது
குறுவினா – எங்கள் தமிழ் வினா விடை:
- தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
- தாய்மொழியாகிய தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவை கொடுக்கும்.
- கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு அனைத்து மனிதர்களும் இன்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பும், அறமும் உதவும்.
- தாய்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை ஊக்குவிக்கும், அஃது பயத்தை போக்கி இன்பத்திற்கு வழி வகுக்கும்
2. தமிழ் மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
- நம் தாய்மொழியாகிய தமிழை கற்றவர் பொருள் மற்றும் செல்வத்திற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்கள். தன்னை போற்றாதவரையும் குறை கூறமாட்டார்.
சிறுவினா – எங்கள் தமிழ் வினா விடை:
- ‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக
- தாய்மொழியாகிய தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவை கொடுக்கும்
- நம் தாய்மொழியாகிய தமிழை கற்றவர் பொருள் மற்றும் செல்வத்திற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்கள். தன்னை போற்றாதவரையும் குறை கூறமாட்டார்.
- கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு அனைத்து மனிதர்களும் இன்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பும், அறமும் உதவும்.
- தாய்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை ஊக்குவிக்கும், அஃது பயத்தை போக்கி இன்பத்திற்கு வழி வகுக்கும்
சிந்தனை வினா – ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை:
- கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
- தேன் பல ஆண்டுகள் கெடாமல் இருப்பதை போலத் தமிழும் என்றும் கெடாமல் பாதுகாப்புடனும், சிறப்புடனும் திகழ்கிறது.
- தேன் சாப்பிடச் சாப்பிட உடல் வளம் பெருகும். தமிழ் கற்க கற்க உள்ளம் வளம் பெருகும். அதனால் கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.
ஏழாம் வகுப்பு எங்கள் தமிழ் வினா விடைகள் – கூடுதல் வினாக்கள் (7th tamil book back questions with answers Chapter 1.1)
பொருத்துக:
விரதம் – வழி
நெறி – நோன்பு
குறி – தருகின்ற
பொழிகிற – குறிக்கோள்
விடை:
விரதம் –நோன்பு
நெறி – வழி
குறி – குறிக்கோள்
பொழிகிற – தருகின்ற
கோடிட்ட இடங்களை நிரப்புக – ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை:
- நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் ________________
விடை: வே.ராமலிங்கனார்.
2. ________________ என்றழைக்கப்படுபவர் வே.ராமலிங்கனார்.
விடை: காந்திய கவிஞர்
3. நோன்பு என்னும் பொருள் தரும் வேறொரு சொல் ________________
விடை : விரதம்
4. ________________ நம் அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும்
விடை : தமிழ்மொழி
5. எங்கள் தமிழ் மொழி ________________ போன்ற மொழியாகும்.
விடை : தேன்
வினாக்கள்:
- நாமக்கல் கவிஞரின் பன்முகத்தன்மையினை எழுதுக?
தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்.
2. நாமக்கல் கவிஞரின் படைப்புகள் யாவை?
- என்கதை
- சங்கொலி
- மலைக்கள்ளன்
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்
3. நாமக்கல் கவிஞர் குறிப்பு வரைக
- இவருடைய இயற்பெயர் வே.ராமலிங்கனார். நாமக்கல் கவிஞர், காந்திய கவிஞர் என்ற சிறப்பு பெயர் உடையவர். தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் போன்ற சிறப்புகளை பெற்றவர். என்கதை, சங்கொலி, மலைக்கள்ளன் இவரது படைப்புகள் ஆகும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |