Nammalwar Kurippu In Tamil
இன்றைய பதிவில் நம்மாழ்வார் குறிப்பு பற்றி பார்க்க போகிறோம். நம்மாழ்வார் அவர்கள் வைணவ ஆழ்வார்களுள் மிக முக்கியமானவர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்குருகூர் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய காலம் கி.பி 9-ம் நூற்றாண்டு. இவர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிரமாதி ஆண்டு பிறந்தார். இவர் பிறந்து சில நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததால் சடகோபன் என்று அழைக்கப்பட்டார். இவர் திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனர் என்பவரின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
மேலும், திவ்யபிரபந்தம் இடைப்பட்ட காலத்தில் உபயோகத்தில் இல்லை என்றும், திருநாத முனிகள் தவத்தை மேற்கொண்டு, நம்மாழ்வாரை யோக நிலையில் தொடர்பு கொண்டு பாசுரங்களை மீண்டும் கோவில்களில் பாடியதாக கூறுவார். நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, பெரியதிருவாய்மொழி போன்ற பாடல்களை இயற்றியுள்ளார். இதில் திருவாய்மொழி வைணவத்தின் பொக்கிஷம் ஆகும். திருவாய்மொழியில் 1102 பாசுரங்கள் உள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் நம்மாழ்வார் குறிப்பு பற்றி பார்க்கலாம் வாங்க…..
பிறப்பு மற்றும் வாழ்க்கை:

ஆழ்வார் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருக்குறி (குருகூர்) என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் உடையநங்கை தாயின் பெயர் காரி ஆகும். இவர் பிரிக்கும் பொது பேசாமலும், பால் அருந்தாலும். ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயிலில் உள்ள புளிய மரத்தடியின் கீழ் 16 ஆண்டுகள் தத்வம் புரிந்தார். இவர் வைணவ நெறியில் பக்தி இயக்கத்தை பரப்பியவர்.
ஆழ்வாரின் சிறப்புகள்:
ஆழ்வார்களில் இவருக்கு மட்டுமே நம் என்ற அடைமொழி உண்டு. ஆழ்வாருக்கும் அரங்கன் வழங்கிய பெயர் ஆகும். இறைவனிடம் சரணடைவதையே முக்திக்கு வழி என போதித்தார். காலபோக்கில் இதுவே வைணவ மரப்பாக மாறியது. இவர் பாடிய பாடல்கள் வைணவ கோவில்களில் தினசரி வழிபாட்டில் முக்கியமாக உள்ளது.
ஆழ்வார்களின் பெயர்கள் | Alwargal Names in Tamil
நூல்கள்:
நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவைகள் அனைத்தும் ரிக், யசுர், அதர்வண மற்றும் ராம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாக பெரியோர்கள் சொல்வார்கள். இந்த திருவாய்மொழி 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 8 பாசுரங்களும், பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்று தொண்ணுற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளனர்.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |














