வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனவு பலித்தது வினா விடை | Samacheer Kalvi 6th Tamil Solution Chapter 1.4

Updated On: June 29, 2024 3:05 PM
Follow Us:
Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 1.4
---Advertisement---
Advertisement

Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 1.4 கனவு பலித்தது

நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த பதிவில் சமச்சீர் கல்வி ஆறாம் வகுப்பு இயல் ஒன்றில் உள்ள கனவு பலித்தது பாடத்திற்கான வினா விடைகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். குறிப்பாக இந்த பதிவு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ஆறாம் வகுப்பு கனவு பலித்தது வினா விடைகளை கீழ் படித்தறியலாம்.

கனவு பலித்தது ஆறாம் வகுப்பு பாடம் வினா விடை:

1 இக்கடிதத்திற்கு நீங்கள் விரும்பும் வகையில் வேறொரு தலைப்பிடுக.

விடை: இக்கதைக்கு நான் விரும்பும் தலைப்பு “எண்ணம் ஈடேறியது.”

2 உங்கள் எதிர்காலக் கனவு குறித்து ஒரு கடிதம் எழுதுக.

விடை: மாணவர்களை தமிழில் ‘உங்கள் எதிர்கால கனவு’ குறித்து ஒரு கடிதம் எழுதச் செய்தல்.



கனவு பலித்தது மதிப்பீடு:

1 இன்சுவையின் எண்ணம் நிறைவேறக் காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

விடை:

(i) இன்சுவை, தான் எடுத்த செயலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். அவளுடைய அத்தை கூறிய அறிவுரைகளைச் சிரமேற்கொண்டு பின்பற்றினாள்.

(ii) நூலகம் சென்று பல நூல்களைப் படித்து சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொண்டாள். தன்னுடைய வாழ்வில் அதனை மேற்கொண்டாள்.

(iii) விடாமுயற்சியும், உழைப்பும் மனிதனை உயர்த்தும் என்பதற்கு இன்சுவை சான்றாகத் திகழ்ந்தாள்.

2 அத்தையின் கடிதக் கருத்துகளைச் சுருக்கி எழுதுக.

விடை:

‘கனவு பலித்தது’ – கடிதக் கருத்துகள்:

இன்சுவை:

ஆறாம் வகுப்பு படிக்கும் போதே அறிவியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தாள். அவ்விருப்பம் நிறைவேறியது. ஆம் அவள் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் ஆராய்ச்சியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
இன்சுவை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்ததனால் தன் இலக்கை அடைவது கடினமானது என எண்ணினாள். ஆனால் அவளுடைய அத்தையின் ஊக்குவிப்பினால் தன் இலக்கை அடைந்தாள்.

சாதனையாளர்கள்:

சாதனை புரிவதற்கு மொழி தடை இல்லை. கணிதமேதை இராமானுஜம். முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோவின் தலைவர் சிவன், இஸ்ரோ அறிவியல் அறிஞர் வளர்மதி போன்றோர் தம் தாய்மொழித் தமிழில் பயின்ற சாதனையாளர்களாவர்.

தமிழர்களின் அறிவியல் சிந்தனை:

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்ததுதான் உலகம் என்பது அறிவியல் உண்மை. இக்கருத்தினைத் தொல்காப்பியரும் தமது தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ மேலும், உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ளனர்.

இலக்கியங்கள் கூறும் சான்றுகள்:

கடல்நீர் ஆவியாகி மேகமாகிப் பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் உண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவை

கார் நாற்பது: ‘கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி’

அறுவை மருத்துவம்:

போரில் புண்பட்ட வீரரின் மார்பை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு’. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி நற்றிணை என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

3 கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கடிதத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதனை விளக்குக.

விடை:

கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கதைக்குப் பொருந்தும் விதம்:

(i) எண்ணங்கள் நேரானால் செயல்களும் நேராகும். வெற்றியும் நம் கைவசமாகும். இக்கதையில் வரும் இன்சுவை சிறுவயதிலேயே அறிவியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதைத் தன் விருப்பமாகக் கொண்டுள்ளாள்.
(ii) அவள் தமிழ்வழியில் படிப்பதால் தன் இலக்கை அடைய முடியுமா என அச்சமுற்றாள். இன்சுவையின் அத்தை பல சாதனையாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மேலும் பண்டைத் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.
(iii) நூலகம் சென்று சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்வது இன்சுவையின் சிந்தனைக்கு வளம் சேர்க்கும், அறிவியல் மனப்பான்மை பெருகும் எனக் குறிப்பிட்டிருந்தார்
(iv) இதனைச் சிரமேற்கொண்டு இன்சுவை, ஊக்கத்துடனும் விடாமுயற்சியுடனும் படித்து சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் ஆராய்ச்சியாளர் பணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள்.
(v) இன்சுவையின் கடும் உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் ஆர்வத்துடனும் படித்தனால் தன் இலக்கை அடைந்தாள். அவளுடைய கனவும் பலித்தது.

 

ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில்
ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள்
ஆறாம் வகுப்பு வளர் தமிழ் வினா விடைகள்
ஆறாம் வகுப்பு இயல் 1 தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் வினா விடை

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now