ஏழாம் வகுப்பு இயல் 2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் | Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2

Advertisement

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் வினா விடை | Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2

வணக்கம் நண்பர்களே இன்றைய கல்வி சார்ந்த பகுதியில் ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 புத்தகத்தில் உள்ள அப்படியே நிற்கட்டும் அந்த மரம் பாடத்தில் இருக்கும் வினா விடைகளை படித்து தெரிந்து கொள்ளலாம். இணையவழி கல்வியில் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க அப்படியே நிற்கட்டும் அந்த மரம் வினா விடைகளை படித்து அறிந்து கொள்ளலாம்.

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் Book Back Answers

சொல்லும் பொருளும்:

  1. பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
  2. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.

அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்

விடை : கோலிக்குண்டு

2. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _____.

அ) ஒட்டிய பழங்கள்
ஆ) சூடான பழங்கள்
இ) வேக வைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்

விடை : ஒட்டிய பழங்கள்

3. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) பெயர + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர + அறியா

விடை : பெயர் + அறியா

4. ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
விடை : மனம் + இல்லை

5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) நேற்று இரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
விடை : நேற்றிரவு


குறுவினா – அப்படியே நிற்கட்டும் அந்த மரம் பாடம்:

1. நாவல் மரம் எத்தனை தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது?

நாவல் மரம் இரண்டு தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது

2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

  1. காக்கை
  2. குருவி
  3. மைனா
  4. பெயரறியாப் பறவைகள்
  5. அணில்
  6. காற்று
ஏழாம் வகுப்பு காடு வினா விடை


சிறுவினா – அப்படியே நிற்கட்டும் அந்த மரம்:

1.நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை ?

  • ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்போது பார்க்கின்ற போதும், தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கிறது.
  • அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
  • பளபளக்கும் பச்சை இலைகளுடன் கருநீலக்கோலிக்குண்டுகள் போல் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.
  • காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், அணில், காற்று அகியன உதிர்த்து விடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
    தங்கைகள் தங்கள் அக்காகளுக்காக கையில் பெட்டியுடன் நாவல் பழம் பொறுக்குகின்றனர்.
  • இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வெளவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.
  • அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில் தான்


கூடுதல் வினாக்கள் (7th Standard Tamil Book Term 1 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் Solution Lesson 2.2)

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சிறந்த கவிதைகளைத் தொகுத்த கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்த கவிஞர் _____________________

விடை : ராஜமார்த்தாண்டன்

2. ஊரின் வடகோடியில் இருந்த மரம் _____________________

விடை : நாவல் மரம்

3. இரவில் படையெடுத்து வரும் பழந்தின்னி _____________________

விடை : வெளவால் கூட்டம்



பிரித்து எழுதுக:

  1. தானிருந்து = தான் + இருந்து
  2. கருநீலம் = கருமை + நீலம்
  3. பெயரறியா = பெயர் + அறியா
  4. நிலவொளி = நிலவு + ஒளி
  5. பழந்தின்னி = பழம் + தின்னி
  6. நேற்றிரவு = நேற்று + இரவு
  7. மனமில்லை = மனம் + இல்லை


குறுவினா:

1. நாவல்மரம் தோற்றம் குறித்துக் கவிஞர் கூறுவன யாவை

  • ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்போது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கிறது.

2. சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்க காரணம் யாது?

  • அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

3. கவிஞர் ராஜமார்த்தாண்டன் – குறிப்பு வரைக

  • ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர். காெல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
  • ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எனனும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர். சிறந்த தமிழ்க கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
தொடர்புடைய பதிவுகள் (ஏழாம் வகுப்பு இயல் 1)
ஏழாம் வகுப்பு எங்கள் தமிழ் வினா விடைகள்
ஏழாம் வகுப்பு ஒன்றல்ல இரண்டல்ல பாடம்
ஏழாம் வகுப்பு சொலவடைகள் வினா விடை
ஏழாம் வகுப்பு இயல் 1 பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement