செய்ந்நன்றி அறிதல் அதிகார விளக்கம்

Advertisement

செய்ந்நன்றி அறிதல் திருக்குறள் பொருள்

திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும்.  மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் நூல் திருக்குறள் என்று சொல்லலாம். இதில் 133 அதிகாரங்களும். 1330 குறட்பாக்களையும் உடையது. ஓவ்வொரு குறளும் ஒவ்வொரு கருத்தை தனக்குள் கொண்டுள்ளது. தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதற்கான அர்த்தத்தை படிக்கும் மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் இன்றைய பதிவில் செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தில் உள்ள குறள் மற்றும் அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

செய்ந்நன்றி அறிதல் விளக்கம்:

உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே சந்தோசம்.  இவை வானத்தையும், பூமியையும் விட மிகப் பெரியது. பிறர் நமக்கு செய்த துன்பத்தைவிட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்ப்பதே சிறந்தது. பிறர் செய்த உதவியை மறந்தவர், வாழ்வில் உயர் இடத்திற்கு செல்ல முடியாது.

செய்ந்நன்றி அறிதல் திருக்குறள்:

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

விளக்கம்: மற்றவர்களுக்கு உதவு தான் செய்கின்றோம் என்ற நினைவு இல்லாமல் செய்யும் உதவியானது இந்த பூமி மற்றும் வானத்தை விட உயர்ந்தது.

102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

விளக்கம்: நீங்கள் செய்த உதவி சிறியதாக இருக்கலாம், ஆனால் எந்த நேரத்தில் வந்து உதவி செய்கிறீர்கள் என்பது இந்த உலகத்தை விட பெரியது.

103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

விளக்கம்: நீங்கள் செய்த உதவியின் மூலம் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செய்வது கடலை விட பெரியது.

104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

விளக்கம்: ஒருவர் செய்த உதவி சிறியதாக இருக்கலாம், ஆனால் அதனுடைய பலனை அறிந்தவர்கள், பனையளவுக்கு உயர்த்தி பார்ப்பார்கள்.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு விளக்கம்

105. உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

விளக்கம்: ஒருவர் செய்த உதவியின் மதிப்பானது அந்த உதவியில் அளவு மற்றும் அவரின் பெருந்தன்மையை பொறுத்து அமைகிறது.

106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

விளக்கம்: மாசற்றவர்களின் உறவை மறக்கவும் வேண்டாம், அதே சமயத்தில் நம்முடைய துன்பமான நேரத்தில் நம் கூட இருந்தவர்களையும் துறக்க வேண்டாம்.

107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

விளக்கம்: நம்முடைய துன்ப நேரத்தில் உதவி செய்த நட்பை பற்றி அடுத்த அடுத்த தலைமுறையிலும் நினைத்து போற்றுபவரே சான்றோர்.

108.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

விளக்கம்: ஒருவர் நமக்கு செய்த உதவியை மறத்தல் கூடாது, அதே நேரத்தில் ஒருவர் நமக்கு செய்த தீமையை அப்போவே மறப்பது நல்லது.

109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

விளக்கம்: ஒருவர் உங்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்தாலும் அவர் முன்னடி செய்த நன்மையை நினைத்தால் இந்த துன்பம் மறைந்து விடும்.

110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

விளக்கம்: ஒருவர் மற்றவருக்கு செய்த உதவியை மறந்தவருக்கு சொர்க்கம் உண்டு, ஆனால் பிறர் நமக்கு செய்த உதவியை மறந்தவர்க்கு சொர்க்கம் கிடையாது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement