குற்றம் செய்ய தூண்டுபவருக்கு இந்த தண்டனை தான்..! Ipc section 153 சட்டம் தான்..!

Advertisement

Ipc Section 153 in Tamil 

மனிதனாகிய அனைவருக்குமே அடிப்படை சட்டம் தெரிந்திருக்கவேண்டும். அதனை நாம் பயன்படுத்தும் ஸ்மோர்ட் போன் சொல்லிவிடும். நீங்கள் நினைப்பதை தேடினால் போதும் உடனே அதற்கான பதில் கிடைத்துவிடும்.

அந்த வகையில் நாம் நிறைய தவறுகளை செய்வோம் அது சிறிய தவறாக தான் இருக்கும்.  ஆனால் சிலர் குற்றங்களை செய்வதை விட குற்றம் செய்ய தூண்டுவார்கள் அதனை மனதில் வைத்து குற்றம் செய்வார்கள். ஆனால் இந்திய சட்டத்தின் படி குற்றம் செய்வபவர்களுக்கு நிகராக குற்றம் செய்ய துண்டுபவருக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. அதனை பற்றி இங்கு தெளிவாக காண்போம் வாங்க..!

Section 152 Ipc in Tamil:

302 ipc in tamil

அரசு அதிகாரியை எதிர்த்தாலோ அல்லது அவருடைய வேலையை செய்யவிடாமல் தடுத்தாலோ தடுப்போரை தடிக்கும் விதத்தில் இந்த சட்டம் தேவைப்படும் அதாவது  Ipc Section 152 படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கூட இருக்கும், அல்லது அபராதம் வழங்கப்படும்.  இல்லையென்றால் சிறை தண்டனையுடன், அபராதமும் வழங்கப்படுகிறது.

அதேபோல் கலகம் அல்லது பொதுப்பணியாளரை தாக்க முற்பட்டால் அல்லது தாக்கினால், அவருடைய கடமைகளை செய்யவிடாமல் தடுத்தாலும், அதனால் பெரிய சண்டைகளை ஏற்பட்டால் அவரை Ipc Section 152 படி தண்டிக்க முடியும்.

தண்டனை:

  • மிக அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை
  • அல்லது அபராதம்
  • அல்லது இரண்டும் சேர்த்து வழங்கலாம்

முக்கிய அம்சங்கள்:

  • ஒரு பொது சேவகர் (Public Servant) கலவரம் அல்லது சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
  • அந்த பொது சேவகரை உடல்ரீதியாக தாக்குதல் செய்யலாம் அல்லது அவரை கடமையை செய்ய விடாமல் தடுக்கலாம்.
  •  இதனால், பொது சேவகர் தனது கடமையை செய்ய முடியாமல் போக வேண்டும்.

     

Section 153 Ipc in Tamil:

326 ipc in Tamil

ஒருவர் கோவத்தில் அல்லது மனஉளைச்சலில் இருக்கும் போது அவரை கோவப்படுத்து இன்னொருவர் மீது வன்மை வளர்த்து அவரை குற்றம் செய்ய தூண்டினால். தூண்டுபவருக்கு 1 வருடம் சிறை அல்லது அபராதம் வழங்கப்படும் அல்லது சிறை மற்றும் அபராதம் வழங்கப்படும்.

ஒருவரின் மீது ஒருவர் கோவமாக இருந்தால் அவரை தண்டிக்க வேண்டும் என்று சொல்லி அவரை இன்னும் கோவத்திழும் ஆத்திரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசினாலும் அதன் மூலம் அவர் அதிகமாக கோவ பட்டு அதனால் குற்றம் செய்து அதாவது அவரை அடிக்க சென்று அவரை அடித்து அவரை காயத்திற்கு உள்ளாக்கினால். அவரை கோவப்படுத்தி செய்ய சொன்னவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.

தண்டனை:

  • அதிகபட்சமாக 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை சிறை
  • அல்லதுஅபராதம்
  • அல்லது இரண்டும் சேர்த்து வழங்கலாம்

முக்கிய அம்சங்கள்:

  • குழுவொன்றை மற்றொரு குழுவுக்கு எதிராக தூண்டுதல்.
  • தூண்டுதல் காரணமாக கலவரம் அல்லது சமூக அமைதி குலைவது.
  •  இந்த தூண்டுதல் தன்னிச்சையாக (Wanton) செய்யப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 116 பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 
Advertisement