வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 337 மற்றும் 338-க்கான விளக்கம்..!

Updated On: March 6, 2025 6:01 PM
Follow Us:
IPC Section 337 and 338 in Tamil
---Advertisement---
Advertisement

IPC Section 337 and 338 in Tamil

நமது இந்திய தண்டனை சட்டம் பற்றிய சரியான புரிதல் நம்மிடம் உள்ளதா..? என்றால் இல்லை என்பதே நம்மில் பலரின் பதிலாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சட்ட பிரிவு பற்றிய சரியான விளக்கத்தை அறிந்துக் கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 337 மற்றும் 338-க்கான சரியான விளக்கத்தை பற்றி அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 334 மற்றும் 336-க்கான விளக்கம்

IPC Section 337 in Tamil:

337 ipc in tamil

ஒருவரின் உயிருக்கு அபாயத்தை உண்டாகக்கூடிய அல்லது பிறருடைய பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எந்த ஒரு செயலையாவது, அசட்டு துணிச்சலுடன் அல்லது கவனக்குறைவாக யாராவது ஒருவர் புரிந்து அதனால் யாருக்காவது காயம் ஏற்பட்டால். அந்த செயலை புரிந்த நபருக்கு 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

IPC Section 338 in Tamil:

IPC Section 338 in Tamil

ஓருவரின் உயிருக்கு அபாயத்தை உண்டாக்கும் விதத்தில் அல்லது ஓருவருடைய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் முறையில் யாராவது ஒருவரால் அசட்டுத் துணிச்சலுடன் அல்லது கவனக்குறைவாக செய்யப்படும், ஒரு செயலினால்  யாருக்காவது கடுங்காயம் ஏற்பட்டால்.

அந்தச் செயலைப்புரிந்த நபருக்கு 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

IPC  Section 279 In Tamil:

மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓடுவது சவாரி செய்வதும் குற்றமாகும், இந்தக் குற்றத்திற்கு 6 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது 1000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

ஒரு பொதுவழியில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் ஓட்டுதல் அல்லது செலுத்துதல்
எவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாம் அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு அநேகமாக விளைவிக்கப்படலாம் என்ற ஒரு முறையில் ஏதாவதொரு வாகனத்தை ஏதாவதொரு பொது வழியில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் அல்லது கவனக்குறைவாக ஓட்டினால் அல்லது செலுத்தினால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

தண்டனை:

  • அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை சிறை
  • அல்லது ரூ.1,000 வரை அபராதம்
  • அல்லது இரண்டும் சேர்த்து வழங்கலாம்

எடுத்துக்காட்டு:

  • வேகமாக ஓடுகின்ற லாரி ஒரு பாட்டாளியை மோதியது.
  • ஒருவர் சிக்னல் இருந்தும் கவனக்குறைவாக ஓட்டினார்.
  • மதுபானம் அருந்தியபிறகு வாகனம் ஓட்டுதல்.
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now