வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா..? அப்போ விளக்கு எண்ணெய் போதும்..!

Updated On: September 15, 2023 5:12 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Adarthiyaga Mudi Valara Tips in Tamil

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் தங்கள் முடியை பராமரித்து அதன் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய அவசர சூழலில் அது நடக்காத காரியமாகிவிட்டது. அதாவது இன்றைய சூழலில் அனைவருமே வேலைக்கு செல்கிறார்கள். அதனால் நமது தலைமுடியை சரியாக பராமரிக்க முடியாமல் போகின்றது. எனவே நாம் சரியாக நமது தலைமுடியை பராமரிக்காததால் பல வகையான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் வளர்ச்சி குறைகிறது. எனவே தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் தலை முடியை வளர வைப்பதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் தலை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்:

long hair

இயற்கையான முறையில் உங்கள் தலைமுடியை மிகவும் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரவைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க..

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. அரிசி – 1 கப் 
  2. செம்பருத்தி பூ – 3
  3. செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
  4. விளக்கு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. தண்ணீர் – தேவையான அளவு
  6. ஸ்ப்ரே பாட்டில் – 1

முடி அசுர வேகத்தில் வளர பாட்டி கூறிய இந்த ரகசியத்தை ஒரே ஒரு ட்ரை பண்ணி பாருங்க நீங்களே அசந்துடுவீங்க

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் அரிசியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதில் 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை மற்றும் 3 செம்பருத்தி பூ ஆகியவற்றை காம்புகளை நீக்கிவிட்டு சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் விளக்கு எண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இதனை 1 ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து உங்களின் தலைமுடியின் வேர்களில் படுமாறு ஸ்ப்ரே செய்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள். பிறகு தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரம் இருமுறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து 1 மாதத்திற்கு செய்து வந்தாலே உங்களின் தலைமுடி வளர ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…

மெலிந்து காணப்படும் முடி அடர்த்தியாக இல்லங்க காடுபோல் வளர பாட்டி கூறிய ரகசியம்

முடி கிடுகிடுவென வளர கற்றாழையில் பாட்டி சொன்ன இந்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now