Glowing Face Treatment at Home
முகத்தை அழகாக வைத்து வேண்டும் அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு பார்லருக்கு சென்று தன்னை அழகுபடுத்துக்கொள்கிறார்கள். சில நபர்கள் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இப்படி பயன்படுத்தும் போது கொஞ்ச நேரம் மட்டும் தான் முகத்தை பளபளப்பாக காட்சியளிக்கும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் நிரந்தரமாக முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள செய்ய வேண்டும் என்று இந்த பதிவை தெரிந்து கொள்ளவும்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
முகத்தை நிரந்தரமாக பளபளப்பாக வைத்து என்ன செய்ய வேண்டும்:
மஞ்சள்:

மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது. மேலும் சருமத்தை பளபளப்பாகவும் வைத்து கொள்ள உதவுகிறது.
ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி பால் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 அல்லது 20 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்த வேண்டும்.
கற்றாழை ஜெல்:

கற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. மேலும் சருமத்தை ஹைட்ரேட் செய்யவும் உதவுகிறது.
கற்றாழையை சீவி உள்பகுதியில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்தில் 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
முக்கியமாக சளி பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையதால் உங்களுக்கு இருக்கின்ற பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தும், அதனால் இந்த குறிப்பை தவிர்த்து விடவும்.
கன்னம் கொழுகொழுன்னு இருக்கிறதுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா.?
பப்பாளி:

பப்பாளியில் என்சைம்கள் என்ற சத்து உள்ளது. இந்த சத்துக்கள் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. 1/4 கப் பப்பாளியை எடுத்து பேஸ்ட்டாக மசித்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்தில் 3 தடவை செய்ய வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள மூன்று குறிப்புகளில் ஏதவாது ஒரு குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
நாள் முழுவதும் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு பப்பாளியை இப்படி பயன்படுத்துங்க
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














