தலை முடி தரையில் கிடைக்கும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் சேர்த்து தடவுங்க..!

Advertisement

Home Made Curry Leaves Oil in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! பெரும்பாலும் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி எப்பொழுதும் அழகாக தோன்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஆண்கள் அதில் அவ்வளவு கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அழகுக்கென்றே தனியாக ஒரு நேரத்தை செலவிடுவார்கள். அப்படி அனைத்து பெண்களுக்கும் இருக்க கூடிய ஒரே ஆசை முடி நீளமாக வளர வேண்டும் என்பது தான். இதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த எண்ணெய்களை வாங்கி தடவுவார்கள். இப்படி தடவுவதால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. அதனால் இந்த பதிவில் முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர செய்யும் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கருவேப்பிலை எடுத்து கொள்ளவும்:

கருவேப்பிலை எடுத்து கொள்ளவும்

முடியின் வளர்ச்சிக்கு நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் கருவேப்பிலை. கருவேப்பிலையில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் பல நன்மைகளை செய்கிறது.

அதாவது முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்கிறது. முடியை கருமையாக வைத்து கொள்கிறது. அதனால் முடியின் வளர்ச்சிக்கு கருவேப்பிலையை தாராளமாக பயன்படுத்தலாம்.

2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாக தோன்ற இந்த பேஸ் பேக்கை போடுங்க 

கருவேப்பிலை எடுத்து கொள்ளவும்

அதனால் 1 கைப்பிடி அளவு அல்லது உங்கள் முடிக்கு தேவையான கருவேப்பிலையை எடுத்து கொள்ளவும்.

பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். அதில் தண்ணீருக்கு பதிலாக கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். இப்போது அதை நன்றாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

உங்க முடி வளர்ந்து கொண்டே போவதை நீங்கள் காண வேண்டுமா.. அப்போ முருங்கை கீரையை இப்படி பயன்படுத்துங்க

கடாய் அடுப்பில் வைக்கவும்:

கடாய் அடுப்பில் வைக்கவும்

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 200 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலையை எடுத்து ஊற்றி கொள்ள வேண்டும்.

எண்ணெய் நன்றாக கொதித்து, எண்ணெயின் நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். அவ்வளவு தான். இதை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தடவி வந்தால் உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement