Homemade Hair Serum for Hair Growth in Tamil
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவரவர் தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து கொள்ள வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அதே போல் அதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் அப்படி நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நமக்கு வெற்றியையும் நல்ல பலனையும் அளிக்குமா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.
ஆனாலும் நமது முயற்சியை கைவிட்டு விடக்கூடாது. அதனால் தான் இன்றைய பதிவில் 30 நாட்களில் உங்கள் தலைமுடியை நன்கு வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் தலை முடியை நன்கு வளர வைத்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Hair Serum at Home for Hair Growth in Tamil:
எளிமையான முறையில் மற்றும் இயற்கையான முறையில் 30 நாட்களில் உங்கள் தலைமுடியை நன்கு வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- ஆளி விதை – 1 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- வைட்டமின் E கேப்சூல் – 2
- தண்ணீர் – தேவையான அளவு
நீங்க பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் கலந்து தடவுங்கள் உங்க முடி வளர்ச்சி அதிகரிக்கும்
கடாயை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்லினை சேர்க்கவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து கொள்ளுங்கள்.
ஆலிவ் எண்ணெயை கலக்கவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து கொள்ளுங்கள்.
7 நாட்களில் பாதவெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருளை மட்டும் கலந்து தடவுங்க போதும்
தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளவும்:
பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் இதனுடன் கலந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் E கேப்சூலை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இதனை உங்கள் தலைமுடி வேர்களில் படுமாறு தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதனை வாரம் இரு முறை என 30 நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலை முடி நன்கு வளர்வதை நீங்களே காண்பீர்கள்.
நீங்கள் கனவிலும் நினைக்காத அளவிற்கு முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |